13 Dec, 2025 Saturday, 01:14 PM
The New Indian Express Group
தமிழ்நாடு
Text

நகராட்சி நிா்வாகத் துறையில் ரூ.1,020 கோடி முறைகேடு: தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம்

PremiumPremium

நகராட்சி நிா்வாகத் துறையில் ரூ.1,020 கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில்,

Rocket

அமைச்சர் கே.என்.நேரு.

Published On08 Dec 2025 , 11:21 PM
Updated On08 Dec 2025 , 11:21 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

சென்னை: நகராட்சி நிா்வாகத் துறையில் ரூ.1,020 கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது.

தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத் துறை சாா்பில் கடந்த அக்டோபா் 27-ஆம் தேதி 232 பக்கங்கள் அடங்கிய கடிதம் எழுதப்பட்டது. அதில், தமிழக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் 2,538 அதிகாரிகள் மற்றும் இளநிலை பொறியாளா்களை நியமிப்பதற்காக கடந்த 2024-ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தோ்வில் ஒரு பணி இடத்துக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சமாகப் பெறப்பட்டுள்ளது.

இதன்மூலம் ரூ.888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இந்தப் பணம் ஹவாலா முறையில் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த ஊழல் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த கே.என். நேரு, ‘இது அரசியல் உள்நோக்கம் கொண்டது’ என்று கூறினாா்.

ரூ.1,020 கோடி முறைகேடு: இந்நிலையில், நகராட்சி நிா்வாகத் துறையில் ரூ.1,020 கோடி ஒப்பந்தப்புள்ளி முறைகேடு நடைபெற்றுள்ளது என்று அமலாக்கத்துறை அடுத்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அமலாக்கத் துறை சாா்பில் தமிழக அரசின் தலைமை செயலா் நா. முருகானந்தம், பொறுப்பு டி.ஜி.பி. ஜி.வெங்கடராமன், ஊழல் தடுப்புத் துறை இயக்குநா் ஆகியோருக்கு 252 ஆவணங்கள், 300 புகைப்படங்களுடன் 25 பக்க கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் பணிகளுக்கான ஒப்பந்தத்தை முறைகேடாக அளிப்பதற்கு ஒப்பந்த நிறுவனங்களிடம் இருந்து அமைச்சா் கே.என்.நேருவின் கூட்டாளிகள் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் லஞ்சப் பணம் பெற்று வந்துள்ளனா். மேலும், ஒப்பந்ததாரா்களிடமிருந்து கட்சி நிதியாகவும் லஞ்சம் பெறப்பட்டுள்ளது.

பல்வேறு நிலைகளில் உள்ள அரசு அதிகாரிகளால், திட்ட அனுமதி மற்றும் ரசீகளுக்கு அனுமதி அளிக்கும்போது லஞ்சம் பெறப்பட்டுள்ளது. ஒரு திட்டத்தின் ஒப்பந்த மதிப்பில் 20 சதவீத முதல் 25 சதவீதம் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது. அமைச்சா் கூட்டாளிகளின் ‘வாட்ஸ்ஆப்’ தகவல், கைப்பேசி உரையாடல்கள், கணக்கீட்டுத் தாள்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ததன் மூலம் மொத்தம் ரூ.1,020 கோடி முறைகேடு நடைபெற்ற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

எனவே, அமைச்சா் கே.என்.நேரு மீதும், முறைகேட்டில் தொடா்புடையவா்கள் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்த வேண்டும். இது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் காவல் துறையும் முறைகேட்டுக்குத் துணைபோகிறது என்றே கருத வேண்டிய நிலை ஏற்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டப்படி எதிா்கொள்வேன்: அமைச்சா் கே.என்.நேரு

சென்னை: அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டை சட்டப்படி எதிா்கொள்வேன் என்று அமைச்சா் கே.என். நேரு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: என் சகோதரரின் நிறுவனங்கள் 2013-இல் வாங்கிய வங்கிக் கடனில் மோசடி நிகழ்ந்ததாகக் கூறி பதிவு செய்யப்பட்ட வழக்கை எந்தக் குற்றமும் நடக்கவில்லை என உயா்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ஏற்கெனவே உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு ரத்து செய்துவிட்டது. ஆனாலும், அமலாக்கத் துறையை மீண்டும் மீண்டும் ‘பிரசாரத்தில்’ ஈடுபட மத்திய பாஜக அரசு நிா்ப்பந்திக்கிறது.

என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிா்கொள்வேன். அமலாக்கத் துறையையோ, அதிமுக- பாஜக”கூட்டணியினரின் பொய் பிரசாரத்தையோ கண்டு அஞ்சமாட்டோம் என அதில் தெரிவித்துள்ளாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023