அம்பேத்கர் காட்டிய சமூக நீதி, சமத்துவ வழியில் பயணிப்போம்! - விஜய்
சென்னை பனையூரில் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு தவெக தலைவர் விஜய் மரியாதை...
சென்னை பனையூரில் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு தவெக தலைவர் விஜய் மரியாதை...
By இணையதளச் செய்திப் பிரிவு
Muthumari.M
சென்னை பனையூரில் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டு மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய், சென்னை பனையூர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி, எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர், நம் கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்.
அவரது நினைவுநாளை முன்னிட்டு, நமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். அண்ணல் அம்பேத்கர் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
TVK leader Vijay pays homage to Ambedkar at Panayur office
இதையும் படிக்க | கோவை, நாகர்கோவில், திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது