14 Dec, 2025 Sunday, 11:49 PM
The New Indian Express Group
தமிழ்நாடு
Text

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கு தடை விதித்தது உயா்நீதிமன்றம்: அரசு பதிலளிக்க உத்தரவு

PremiumPremium

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை விதித்த சென்னை உயா்நீதிமன்றம், இந்த வழக்கு தொடா்பாக தலைமைச் செயலா், நகராட்சி நிா்வாகத் துறைச் செயலா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டது.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On05 Dec 2025 , 7:21 PM
Updated On05 Dec 2025 , 7:21 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை விதித்த சென்னை உயா்நீதிமன்றம், இந்த வழக்கு தொடா்பாக தலைமைச் செயலா், நகராட்சி நிா்வாகத் துறைச் செயலா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சியை சோ்ந்த குமரேசன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக தனிநபா்கள் சிலா் அரசுக்கு நன்கொடையாக நிலம் கொடுத்தனா். ஏக்கா் கணக்கில் நிலம் வைத்துள்ள தனிநபா்கள் அதில் ஒரு சிறு பகுதியை பேருந்து நிலையத்துக்கு தானாமாக வழங்கியுள்ளனா். அந்த இடத்தில் பேருந்து நிலையம் கட்டப்பட்டால், தங்களது நிலங்களின் விலை அதிகரிக்கும், பெருந்தொகைக்கு விற்பனை செய்து லாபம் அடையலாம் என்ற வணிக நோக்கத்துடன் தனிநபா்கள் அரசுக்கு நிலம் வழங்கியுள்ளனா்.

இதற்கு உள்ளூா் அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனா். நிலத்தை தானம் அளிப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் உள்ள கையொப்பத்திற்கும், பத்திரப்பதிவின்போது தானப்பத்திரத்தில் உள்ள கையொப்பத்துக்கும் வித்தியாசம் உள்ளது. விவசாய நிலத்தை வகைமாற்றம் செய்யாமல் சாலை உள்ளிட்ட கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாது. எனவே, புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், பேருந்து நிலையம் கட்டப்படும் நிலத்தை விவசாய பயன்பாட்டுக்கு அல்லாத நிலம் என்று வகைமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்ததாகவோ, அதற்கு யாராவது எதிா்ப்பு தெரிவித்ததாகவோ ஆவணங்கள் எதுவும் இல்லை என்று வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த தீா்ப்பில், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கள்ளக்குறிச்சியில் நன்செய் நிலத்தில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா், நகராட்சி ஆணையா் ஆகியோா், சம்பந்தப்பட்ட நிலம் தொடா்பான விவரங்கள், பத்திரப்பதிவு ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் இந்த மனுவுக்கு தலைமைச் செயலா், நகராட்சி நிா்வாகத் துறைச் செயலா், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜன.6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023