சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை!
சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவது தொடர்பாக..
சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவது தொடர்பாக..
By இணையதளச் செய்திப் பிரிவு
C Vinodh
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று(டிச. 1) காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்ந்து வந்த நிலையில், தற்போது மழையின் தீவிரம் அதிகரித்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சாலைகளில் அதிகப் படியான தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். தாழ்வான இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
சென்னையில் குறிப்பாக வேளச்சேரி, துரைப்பாக்கம், கிண்டி, வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. கடலோரப் பகுதிகளான பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை(டிச. 1) முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மேலும், புயல் சின்னம் அடுத்த 2 நாள்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வரும் டிச. 3 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சென்னையை நோக்கி வரும் மேகக் கூட்டங்கள்! அடுத்த 2 மணி நேரத்துக்கு கவனம்
Heavy rains are falling with strong winds in various parts of Chennai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது