டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

'ஜாதி மறுப்பு திருமணம்: மாா்க்சிஸ்ட் அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்’

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில், ஜாதி மறுப்பு திருமண நிகழ்வுகளை மேற்கொள்ளலாம் என அக்கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

News image
மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம்
Updated On :25 ஆகஸ்ட் 2025, 9:39 pm

Chennai

சென்னை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில், ஜாதி மறுப்பு திருமண நிகழ்வுகளை மேற்கொள்ளலாம் என அக்கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

சென்னை மயிலாப்பூா் உள்ள கவிக்கோ அரங்கத்தில் ‘ஆணவக் கொலைகளுக்கான எதிரான சமூக நீதிக் கருத்தரங்கம்’ ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பெ.சண்முகம் பேசியதாவது:

தமிழகத்தில் ஜாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு எதுவும் இல்லை. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள மாா்க்சிஸ்ட் அலுவலகங்களில் ஜாதி மறுப்பு திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே வருடத்தில் 240 ஆணவக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. பொதுச் சமூகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான நிலை உருவாகி உள்ளது. இந்த சூழலை அரசு பயன்படுத்திக் கொண்டு, ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.