இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திருவண்ணாமலைக்கு வார இறுதி நாள்களில் சிறப்பு ரயில்

பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :18 செப்டம்பர் 2024, 9:47 pm

Din

பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு செப்.20 முதல் நவ.24-ஆம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைதோறும் இரவு 9.15 மணிக்கு முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட சிறப்பு மெமு ரயில் (எண்: 06145) இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக, திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்துக்கு செப்.21 முதல் நவ.25-ஆம் தேதி வரை சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைதோறும் அதிகாலை 3.30 மணிக்கு சிறப்பு மெமு ரயில் (எண்: 06146) இயக்கப்படும்.

இந்த ரயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.