வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்; படகு சவாரி செய்ய ஆர்வம்!

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டினர்.

News image

ஏற்காடு

Updated On :11 அக்டோபர் 2024, 12:19 pm

சேலம் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியான ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். படகு சவாரி செய்ய அதிகமானோர் குவிந்துள்ளனர். எங்குப் பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என‌ 3 நாள்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அதனால் சாலையோர கடைகளில் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், படகு சவாரி செய்ய அலைமோதியது மக்கள் கூட்டம். படகு சவாரி செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்து இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகு பயணம் செய்கின்றனர்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் வார விடுமுறை என மூன்று நாள்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகைபுரிந்துள்ளனர்.

அதனால் சேலத்தின் புகழ் சொல்லும் இடமாகவும் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள குவிந்துள்ளனர். வழக்கமாகவே விடுமுறை நாள்களில் இங்கு ஏராளமான மக்கள் குவிவது வழக்கம். ஏராளமான பூங்காக்கள், படகு சவாரி, சுவையான உணவகங்கள் என இங்கு வரும் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்க பல விஷயங்கள் உள்ளன.

ஏற்காட்டிலுள்ள முக்கிய இடங்களான அண்ணா பூங்கா, படகு இல்லம், லேடிஸ் சீட், சேர்வராயன் மலை, அண்ணாமலையார் கோயில் மற்றும் மான் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடும்பத்துடனும் நண்பர்களும் பொழுதை களித்து வருகிறார்கள்.

மேலும் ஏற்காட்டில் லேசான குளிரும் சாரல் பனி பொலிவும் இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.