தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக திருவெறும்பூர் சார்பதிவாளர் கைது

ரூ.20 ஆயிரம் தருவதாக கூறிய கோபாலகிருஷ்ணன், லஞ்சம் தர விருப்பம் இல்லாததால், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாா் செய்தாா்.

News image

திருவெறும்பூர் சார்பதிவாளர் சபரி ராஜன்

Updated On :2 மார்ச் 2024, 5:02 am

திருச்சி: ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக திருவெறும்பூர் சார்பதிவாளர் சபரி ராஜன் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (65). ரியல் எஸ்டேட் உரிமையாளர். இவருக்கு நவல்பட்டு கிராமத்தில் உள்ள காலி மனையை கார்த்திகேயன் என்பவருக்கு விற்பதாகவும், அதற்காக 1.3.2024 ஆம் தேதி திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்வதாக முடிவு செய்துள்ளார்கள்.

இது தொடர்பாக கோபாலகிருஷ்ணன் பிப்ரவரி 27 ஆம் தேதி திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்று அங்கிருந்த சார்பதிவாளர் சபரிராஜன் என்பவரை அணுகி பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக விவரம் கேட்டுள்ளார்.

அதற்கு சார்பதிவாளர் சபரிராஜன் ஒரு பத்திரத்திற்கு ரூ.10 ஆயிரம் விகிதம் இரண்டு பத்திரத்திற்கு ரூ.20 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து ரூ.20 ஆயிரம் தருவதாக கூறிய கோபாலகிருஷ்ணன், லஞ்சம் தர விருப்பம் இல்லாததால், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாா் செய்தாா்.

இதையடுத்து லஞ்சம் ஒழிப்பு போலீஸார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கோபாலகிருஷ்ணனிடம் கொடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை(மார்ச்.1) மாலை 5 மணியளவில் பத்திரப்பதிவு முடிந்தவுடன் கோபால கிருஷ்ணன் வசம் இருந்து தனிநபர் சூர்யா (24) என்பவர் மூலம் சார்பதிவாளர் சபரிராஜன் (41) லஞ்ச பணத்தை பெற்ற போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி ஆகியோர் கையும் காலமாக பிடித்தனர்.

தொடர்ந்து விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.