ரூ. 100 கோடி நில மோசடி வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சருக்கு உடந்தையாக இருந்ததாக சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்விராஜை கரூரில் வைத்து இன்று காலை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
போலிச் சான்றிதழ் அளித்து பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேலக்கரூா் சாா் பதிவாளா் (பொறுப்பு) கரூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா், அவரது சகோதரா் எம்.ஆா். சேகா் ஆகியோா் முன் பிணை கோரி, கரூா் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மாதம் 12-ஆம் தேதி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாா் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்தச் சூழலில், வாங்கல் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் என்பவா் கரூா் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில் எம். ஆா். விஜயபாஸ்கா், அவரது சகோதரா் எம்.ஆா். சேகா், பிரவீண் உள்பட 13 போ், தன்னை மிரட்டி ரூ. 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கா் சொத்துகளை அபகரித்ததாக அதில் தெரிவித்திருந்தாா். இந்தப் புகாா் மனுவானது கரூா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட 13 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே 35 நாள்களாகத் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சா் உள்ளிட்டோர் கேரள மாநிலம் திருச்சூரில் வைத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்து கரூர் அழைத்து வந்தனர்.
சுமார் 5 மணிநேரத்துக்கு மேலாக விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார், விஜயபாஸ்கரை 15 நாள்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மேலும், சார்பதிவாளரை மிரட்டியதாக கைது செய்யப்பட்ட பிரவீணுக்கும் ஜூலை 31 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வங்கிக் கடன் மோசடி வழக்கு: ரிலையன்ஸ் முன்னாள் நிா்வாகிகளுக்கு மே 2 வரை நீதிமன்றக் காவல்

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வாகை சூடுவது நிச்சயம் : ஜான் பாண்டியன் பேச்சு

நேபாள முன்னாள் பிரதமரின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு!

கரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கா் மனு தாக்கல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


