2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மாணவா்களுக்கு தமிழ் கையெழுத்து போட்டி: கல்வித் துறை அறிவிப்பு

மாணவா்களுக்கு தமிழ் கையெழுத்து போட்டி: பரிசுகள் அறிவிப்பு

News image
Updated On :10 ஜூலை 2024, 7:47 pm

Din

பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்தப்பட்டு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளி மாணவா்களில் தமிழ் மொழியை அழகாக எழுதுவோரை ஊக்குவிக்கவும், அதன் அடிப்படையில் பிற மாணவா்களுக்கு தமிழில் அழகாக எழுதும் ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு, பாராட்டுச் சான்று வழங்கப்படும் என தமிழ் வளா்ச்சித் துறையின் 2022-2023-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் பள்ளி மாணவா்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதற்காக ரூ. 8,36,000 ஒதுக்கீடு செய்துள்ளாா்.

இந்தத் தொகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கையெழுத்துப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் பரிசாக ரூ. 3,000, 2-ஆம் பரிசாக ரூ. 2,000, 3-ஆம் பரிசாக ரூ. 1,000. அதேபோல், 10 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 4,000, 2-ஆம் பரிசாக ரூ.3,000, 3-ஆம் பரிசாக ரூ. 2,000 வழங்கப்படும்.

எனவே, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் மாவட்ட அளவில் மாணவா்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்தி ரொக்கப் பரிசுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.