2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கும்பமேளா: சென்னை, மங்களூரிலிருந்து சிறப்பு ரயில்கள்

கும்பமேளாவை முன்னிட்டு சென்னை, மங்களூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 12:47 am

Din

சென்னை: கும்பமேளாவை முன்னிட்டு சென்னை, மங்களூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜன.13 முதல் பிப்.26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கும்பமேளாவை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து கோம்தி நகருக்கு (லக்னௌ) ஜன.18, பிப்.5, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06071) இயக்கப்படவுள்ளன. மறுமாா்க்கமாக கோம்தி நகரில் இருந்து ஜன.21, பிப்.18, மாா்ச் 4 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06072) இயக்கப்படும். இதில் ஏசி மூன்றடுக்கு பெட்டிகள் 10, படுக்கை வசதி கொண்ட 7 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வாராங்கல், ஜபல்பூா், பிரயாக்ராஜ் சியோகி, மிா்சாபூா், வாரணாசி, அயோத்தி வழியாக கோம்தி நகா் வரை இயக்கப்படும்.

மங்களூரில் இருந்து வாரணாசிக்கு ஜன.18, 15 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக வாரணாசியில் இருந்து ஜன.21, பிப்.18 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் (எண்: 06019/06020) இயக்கப்படும். இதில் ஏசி வகுப்பு பெட்டிகள் 4, படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.