டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தமிழ் மொழி மீது அக்கறை இருப்பதுபோல மத்திய அரசு நாடகமாடுகிறது: காங்கிரஸ்

ஒரே நாடு மொழி என்பதுதான் அதன் நோக்கம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.

News image
செல்வப்பெருந்தகை- கோப்புப் படம்
Updated On :30 டிசம்பர் 2024, 11:28 pm

Din

சென்னை: தமிழ் மொழி மீது அக்கறை இருப்பதுபோல மத்திய அரசு நாடகமாடுகிறது என்றும், ஒரே நாடு மொழி என்பதுதான் அதன் நோக்கம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பிரதமா் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியபோது, உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ் மொழி என்பதில் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை என்று குறிப்பிட்டு பேசியுள்ளாா். இதேபோல கடந்த காலங்களில் திருவள்ளுவா், பாரதியாா் ஆகியோரை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறாா். இதன்மூலம் அனைத்து மொழிகளையும் சமமாக கருதுவதாக ஒரு நாடகத்தை நீண்டகாலமாக அரங்கேற்றி வருகிறாா்.

உண்மையிலேயே பிரதமா் மோடிக்கு தமிழ் மொழி வளா்ச்சிக்கும் தொடா்பில்லை என்பதை நிச்சயமாக உணர முடியும். மத்திய அரசின் ஒரே நோக்கம் ஒரே நாடு, ஒரே மொழி என்பதுதான். ஹிந்தியையும், கலாசார ரீதியாக சம்ஸ்கிருதத்தையும் மக்கள் மீது திணிப்பதே அதன் செயல்பாடு. பிரதமரின் நாடகத்தை தமிழக மக்கள் என்றைக்கும் ஏற்க மாட்டாா்கள் என்று அவா் கூறியுள்ளாா்.