அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

வாக்குப்பதிவு: நெரிசலை தவிர்க்க 16, 17 தேதிகளில் பயணம் செய்ய அறிவுரை!

சொந்த ஊருக்கு செல்வோர் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய போக்குவரத்து துறை அறிவுறுத்தல்

News image
Updated On :15 ஏப்ரல் 2024, 10:10 am

DIN

மக்களவை தேர்தலுக்காக சொந்த ஊருக்கு செல்வோர் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே பயணத்தை திட்டமிட போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு லட்சக்கணக்கானோர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், மக்கள் சிரமமின்றி பயணிக்க வசதியாக ஏப்.17,18 ஆகிய தேதிகளில் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளான 18-ஆம் தேதி கடைசி நேரத்தில் பயணித்து நெரிசலில் சிக்கிக் கொள்வதை தவிர்க்க 16, 17 தேதிகளில் அரசுப் பேருந்துகளில் காலியாக உள்ள முன்பதிவு இருக்கைகளில் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் மொத்தமுள்ள 30,630 இருக்கைகளில் 29,608 இருக்கைகளும், புதன்கிழமை 24,833 இருக்கைகளும் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள போக்குவரத்து துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.