தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

‘கொள்கையாவது, வெங்காயமாவது..’: ராமதாஸை சாடிய ஜெயக்குமார்!

’சீட்’ பேரமும், மற்ற பேரங்களுக்குதான் ராமதாஸ் உடன்படுவார் என்று ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

News image

ஜெயக்குமார்

Updated On :2 ஏப்ரல் 2024, 6:37 am

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸை அண்ணா திராவிட முன்னேற்ற கழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் ஒரு மாதத்துக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்திய பாமக, இறுதியில் பாஜக கூட்டணியில் இணைந்து 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதனிடையே, பாமக மற்றும் அதிமுக தலைவர்கள் இடையே பிரசாரத்தின்போதும், செய்தியாளர்கள் சந்திப்பின்போதும் தொடர்ந்து வார்த்தை போர் நிலவி வருகிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் பேசியதாவது:

“ஜெயலலிதா இல்லையென்றால் பாமக வெளியே தெரிந்து இருக்காது. எங்கள் முதுகில் ஏறி சவாரி செய்தவர்கள் அவர்கள். பாமக தொடங்கும்போது அரசுப் பதவிக்கு வரமாட்டோம், வந்தால் சவுக்கால் அடியுங்கள் என்று ராமதாஸ் கூறினார். அவரது மருமகள் தேர்தலில் நிற்கிறார். மகன் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்துள்ளார்.

ஜெயலலிதாதான் அன்புமணியை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தவர். பாமக தொண்டர்களே அதிமுகவுடன் கூட்டணி வைக்கதான் விரும்பினார்கள். தொகுதிகள், மற்றவைக்கான பேரம் அதிகமாகும் இடத்தில்தான் ராமதாஸ் உடன்படுவாரே தவிர கொள்கையாவது, கூட்டணியாவது, வெங்காயமாவது.. எதுவும் அவருக்கு கிடையாது.

பாமகவுக்கு அங்கீகாரம் கொடுத்தது, அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது அதிமுக. சட்டப்பேரவையில் 5 எம்எல்ஏக்களை கொண்ட பாமகவால் தனியாக நின்று ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாது.” என்று விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.