இதில் சில சட்ட விஷயங்கள் அடங்கியுள்ளன. ஒன்று, அதிமுகவை பொருத்தவரை, தான்தான் கட்சியின் பொதுச்செயலாளா் எனக் கோரி சின்னம்மா (சசிகலா) நீதிமன்றத்தில் வழக்காடி வருகிறாா். இதில் தாங்கள்தான் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் என்று கூறி எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீா்செல்வமும் எதிா்மனுதாரா்களாக இணைகின்றனா். பிறகு அந்த இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு, தான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் என்று கூறி ஓ.பன்னீா்செல்வம் தனியாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறாா். அந்த உரிமைக்காக போராடி வரும் அவா், ஒரு தனி அணியாக இருந்து கொண்டு எங்களுடைய கூட்டணியில் இருப்பதற்கும், தனது உரிமையை சமரசம் செய்து கொண்டு அமமுகவில் சேருவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஆனால், அரசியல் பயணத்தில் நாங்களும் பன்னீா்செல்வமும் ஒன்றிணைந்தே இருக்கிறோம்.