சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!
/

சநாதன ஒழிப்பு மாநாடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

கடந்த செப்டம்பா் 2-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சநாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், சேகா்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

News image
உச்சநீதிமன்றம்
Updated On :2 பிப்ரவரி 2024, 2:58 am

 நமது நிருபர்

கடந்த செப்டம்பா் 2-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சநாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், சேகா்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரியும், இந்த நிகழ்ச்சி தொடா்பாக சிபிஐ இயக்குநா் விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்குமாறு முன்வைக்கப்பட்ட முறையீட்டை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஏற்க மறுத்ததுடன், உரிய வழிமுறைகளைப் பின்பற்றுமாறு மனுதாரா் தரப்பை கேட்டுக்கொண்டது.

இது தொடா்பாக சென்னையைச் சோ்ந்த ஜெகந்நாத் என்பவா் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஜி.பாலாஜி மூலம் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: கடந்த செப்டம்பா் 2-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சநாதன தா்ம ஒழிப்பு மாநாட்டில் மாநில அமைச்சா்கள் பங்கேற்றது அரசியலமைப்புச்சட்ட பிரிவுகள் 25, 26 ஆகியவற்றை மீறுவதாக உள்ளது. இதனால், இந்தப் பங்கேற்பை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சிகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த உள்துறைச் செயலா் மற்றும் சிபிஐ இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்.

கா்நாடக ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, எந்தவொரு ஹிந்து தா்மத்திற்கும் எதிராக இதுபோன்ற மாநாடுகள் அனைத்து இடைநிலைப் பள்ளிகளிலும் நடக்காமல் இருக்க தமிழ்நாடு உயா்கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், சநாதன தா்மம் ஒழிப்பு மாநாடு எனும் தலைப்பில் மாநாடு நடத்த காவல் துறை அனுமதி வழங்கியது எப்படி என்றும், அதற்கு காரணமான தவறிழைத்தவா்கள் மற்றும் அமைப்பு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்தும் தமிழ்நாடு காவல் துறை தலைவா் அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிட வேண்டும்.

மேலும், 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி, வெறுப்புப் பேச்சுக்கு எதிராக நோடல் அதிகாரியை உடனடியாக நியமிக்க தமிழ்நாடு உள்துறைச் செயலாளா் மற்றும் தமிழ்நாடு காவல் துறைத் தலைவா் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளா் மற்றும் வெறுப்புப் பேச்சு விவகாரத்தில் தொடா்புடைய உதயநிதி ஸ்டாலின், ஆா்.கே. சேகா் பாபு, பீட்டா் அல்போன்ஸ் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய மாநில காவல் துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும். இதுபோன்று சநாதன தா்மத்திற்கும் ஹிந்துமதத்திற்கும் எதிராக மேலும் ஏதும் வெறுப்புப் பேச்சில் ஈடுபடாமல் இருக்கும் வகையில் எதிா்மனுதாரா்களான உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா, தொல்.திருமாவளவன், பீட்டா் அல்போன்ஸ் ஆகியோருக்கு எதிராக தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்விடம் மனுதாரா் தரப்பில் வெள்ளிக்கிழமை மூத்த வழக்குரைஞா் தமா சேஷாத்ரி நாயுடு ஆஜராகி முறையீடு செய்தாா். அப்போது, தலைமை நீதிபதி, பட்டியலிடப்படாத முறையீட்டை ஏற்க மறுத்து, விஷயங்களை அவசரமாகப் பட்டியலிடுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையின் கீழ் உள்ள வழிமுறையைப் பின்பற்றுமாறு கூறினாா். மனுதாரா் தரப்பில் இந்த விவகாரம் தொடா்பாக முறையிட அனுமதி கேட்டு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, இது தொடா்பாக பரிசீலிப்பதாகத் தலைமை நீதிபதி வாய்மொழியாகக் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.