தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஊர்வலத்துக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு நவம்பர் 3-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
விஜயதசமியை முன்னிட்டு தமிழகத்தில் அக்டோபர் 22, 29 ஆகிய தேதிகளில் 33 இடங்களில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது. மனுதாரர் மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுடன் பேரணி நடத்தலாம் என கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் வழக்குரைஞர் சபரிஷ் சுப்ரமணியன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பல்வேறு இடங்களில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களின் வரலாற்றை பரிசீலிக்காமலும், இதுபோன்ற பேரணிகளின் தேவைகள், நோக்கங்களை பரிசீலிக்காமலும் சட்டம்- ஒழுங்கு சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறித்து பரவலாக உள்ள உளவுத்துறை அறிக்கைகளை பரிசீலிக்காமலும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அக்டோபர் 22, 29 ஆகிய தேதிகளில் கொடி அணிவகுப்பு பேரணியை நடத்த எதிர் மனுதாரர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நவராத்திரி விழா மற்றும்
தமிழகம் முழுவதும் நடைபெறும் தேவர் ஜெயந்தி போன்ற விழாக்களின் கூடுகைகளையும் பரிசீலிக்காமல் இந்த உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீது நவம்பர் 3-இல் விசாரணை நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


