சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மகளிர் தின விழா: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!

தமிழக அரசு சார்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினவிழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், விருதுகள் மற்றும் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:41 am

DIN

தமிழக அரசு சார்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினவிழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், விருதுகள் மற்றும் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா இன்று நடைபெற்று வருகின்றது.

இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அவ்வையார் விருதை நீலகிரி கமலம் சின்னசாமி, பெண் குழந்தை விருதை சேலம் இளம்பிறைக்கு வழங்கினார். மேலும், மகளிருக்காக சிறப்பாக செயல்பட்ட திருவள்ளூர், நாகப்பட்டினம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து கருணை அடிப்படையில் தமிழரசி, சுபா, சோபியா ஹரிணி, ராஜலட்சுமி ஆகியோருக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

இந்த விழாவில் முதல்வர் பேசியதாவது:

பெரியாருக்கு பெரியார் என்ற பட்டத்தை தந்தது பெண்கள்தான். பெண்களுக்கு தன்னம்பிக்கை, துணிச்சல் தந்தது திராவிட இயக்கம்தான் என்று தெரிந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், வட மாநில பெண்கள் தமிழகத்திற்கு அடைக்கலம் தேடி வரும் அளவுக்கு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் உள்ளது. அனைத்து வகையிலும் பெண்களை முன்னேற்றி வருகிறது திராவிட மாடல் என்றார்.

இந்த விழாவில், அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு, கீதா ஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.