சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு எதிராக ட்வீட் செய்த தமிழக பாஜக மாநில செயலாளர் கைது

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக பாஜகவின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வெள்ளிக

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 7:08 pm

DIN

சென்னை: மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக பாஜகவின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வெள்ளிக்கிழமை சென்னையில் கைது செய்தனர்.

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில், "உங்கள் பிரிவினைவாதத்தின் போலி அரசியல் அந்த சாக்கடையை விட நாற்றமடிக்கிறது, மனிதனாக வாழ வழி தேடுங்கள் தோழமையே!" என்று பதிவிட்டிருந்தார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அளித்த அவதூறு புகாரில் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். 

எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காவல் ஆணையர் அலுவலகம் வெளியே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பணமோசடி வழக்கில் மாநில அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூன் 23 வரை அமலாக்க இயக்குநரகம் காவலில் வைக்க சென்னை பெருநகர அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். 

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில், " தமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுகவின் கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்டுகளின் கேவலமான இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியது தான் அவரது ஒரே தவறு" என்று கூறியுள்ளார்.

"ஒருவரின் பேச்சு சுதந்திரத்தை குறைக்க அரசு இயந்திரத்தை பயன்படுத்துவது தவறு. சிறு விமர்சனத்திற்கு தடுமாற்றம் அடைவது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கு தகுதியற்றது. இதுபோன்ற கைதுகள் எங்களைத் தடுக்காது, நாங்கள் தொடர்ந்து அசௌகரியமான உண்மையை அம்பலப்படுத்துவர்களாக இருப்போம்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.