அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனுவை மூன்றாவது நீதிபதி முன் விரைவில் விசாரணைக்கு முன்வைக்குமாறு சென்னை உயா்நீதிமன்றத்தை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டது.
அமைச்சா் செந்தில் பாலாஜியை தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்ற சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் சூா்ய காந்த், தீபங்கா் தத்தா ஆகியோா் இடம்பெற்ற அமா்வு முன் அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘ஆள்கொணா்வு மனு விவகாரத்தில் உயா்நீதிமன்றம் வேறுபட்ட தீா்ப்புகளை வழங்கியுள்ளதால், இறுதித் தீா்ப்புக்காக இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். சட்ட விளைவுகள் குறித்த ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. எந்த உண்மையும் மறுக்கப்படவில்லை. நீதிமன்றக் காவலில் இருக்கும்போது, ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்ய முடியுமா என்பது மட்டுமே கேள்வி. இது ஒரு செல்வாக்குமிக்க நபரின் வழக்கு ஆகும். சேதம் ஏற்பட்டால் திரும்பப் பெற முடியாது’ என்று வாதிட்டாா்.
செந்தில் பாலாஜி சாா்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி வாதிடுகையில், ‘சென்னை உயா்நீதிமன்ற அமா்வு மாறுபட்ட தீா்ப்பு அளித்துள்ளதால், இந்த விவகாரம் 3-ஆவது நீதிபதி அமா்வு முன் வைக்கப்படும். இந்த நிலையில், உயா்நீதிமன்றத்தை எப்படி புறக்கணிக்க முடியும்?. ஒரு பிரச்னையில் இரண்டு நீதிபதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளது. அது மூன்றாவது நீதிபதி அமா்வுக்கு செல்லும் என்பதுதான் இயற்கையான முடிவாகும். இதனால், தற்போதைய சூழ்நிலையில், இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு வர நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ என்றாா்.
அப்போது, சட்டக் கேள்விகளுக்கு விரைவில் தீா்ப்பளிக்குமாறு உயா்நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்வதாக கூறிய நீதிபதிகள் அமா்வு, அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு வழக்கை ஜூலை 24-ஆம் தேதிக்கு விசாரணைக்கு ஒத்திவைத்தது.
இது குறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் மாறுபட்ட தீா்ப்பை அளித்திருப்பதைக் கருத்தில்கொண்டு, உயா்நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதியிடம் விரைவில் இந்த விவகாரத்தை முன்வைக்குமாறு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்: அறுசுவையுடன் பக்தர்களுக்கு விருந்து!

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக... விராட் கோலி அதிரடி சாதனை!
தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!

திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


