தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தமிழகத்தில் 42,000 ஏரிகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்: என்னவெல்லாம் மாறும்?

தமிழ்நாட்டில் உள்ள 42,000 ஏரிகளையும் கணக்கெடுத்து, அவற்றுக்கு நீர்வரும் பாதைகள், நீரைத் தேக்கிவைக்கும் திறன் ஆகியவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.

News image

தமிழகத்தில் 42,000 ஏரிகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

Updated On :30 நவம்பர் 2022, 10:56 am

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 42,000 ஏரிகளையும் கணக்கெடுத்து, அவற்றுக்கு நீர்வரும் பாதைகள், நீரைத் தேக்கிவைக்கும் திறன் ஆகியவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள 14,318 ஏரிகளை நீர்வளத் துறை நிர்வகித்து வருகிறது. அதில் 2,700 ஏரிகள் இந்த மழைக்கு முழுவதுமாக நிரம்பிவிட்டன. இந்தத் துறை அதிகாரிகள் கூறுகையில், மீதமிருக்கும் ஏரிகளிலும், நீர் தேக்கும் அளவானது ஆக்கிரமிப்பு மற்றும் போதுமான பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் குறைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

வளர்ந்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, ஏரிகளின் நீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. இந்த நிலையில்தான், அனைத்து ஏரிகளையும் ஆய்வு செய்து, விரைவாக ஆய்வறிக்கை தாக்கல் செய்யுமாறு நீர் வளத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன். ஆனால், ஆவணங்களில் இருப்பது போன்ற நில அமைப்பைத் தேடிக் கண்டுபிடிப்பது சிரமம். எனவே, வருவாய்த் துறையிடம் மாநில அளவிலான தரவுகளை கேட்டிருக்கிறோம். கிடைத்ததும் நிலத்தை அடையாளம் காணும் பணிகள் தொடங்கிவிடும் என்கிறார்கள் அதிகாரிகள்.

நில அபகரிப்பு தொடர்பாக மாவட்ட மற்றும் மண்டல அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை மாதந்தோறும் கூடி நடந்து வரும் வேலைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பது நல்ல பலனைத் தரும் என்றும் அதிகாரிகள் கருதுகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள ஏராளமான ஏரிகளில் நீரைத் தேக்கி அவற்றை விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காகப் பயன்படுத்தலாம். ஆனால், பல ஆண்டுகளாக ஏரிகளை போதுமான அளவில் பராமரிக்காத காரணத்தால், அதற்கு வரும் நீர்வரத்தும் குறைந்துவிட்டது என்கிறார் விவசாயிகள்.

மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது தூர்வாரப்பட வேண்டும். இது தொடர்பாக பல முறை பல தரப்பினர் வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. எனவே, தமிழக அரசு, நீர்நிலைகளைப் பராமரிக்க கூடுதல் தொகையை ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.