எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திருவள்ளூர் மாவட்டத்தில் 11 கிராமங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

சென்னை, ரெட்ஹில்ஸ் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் 11 கிராமங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:49 am

IANS

சென்னை, ரெட்ஹில்ஸ் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் 11 கிராமங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வடகிழக்குப் பருவமழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் நிலையில் ரெட்ஹில்ஸ் ஏரியிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வினாடிக்கு 500 கன அடி உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜார்ஜ் விடுத்துள்ள அறிக்கையில்,

வரும் நாள்களில் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் ரெட்ஹில்ஸ் ஏரியில் இருந்து 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ரெட்ஹில்ஸ் ஏரியில் உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளதால், உபரிநீா் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள தண்டல், நாரவாரிக்குப்பம், கழனி, கிராண்ட்லைன், வடகரை, புழல், வடபெரும்புக்கம், மாத்தூர், வாசப்பூர், மணலி, சடையங்குப்பம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 11 கிராமங்களுக்கு வெள்ள அபாயத்துக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 569 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பூண்டி, சோழவரம் நீர்த்தேக்கங்களை மாநில அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.