நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

என்ன, தமிழகத்தில் போலி வங்கியா? 8 கிளைகள்; 3,000 வங்கிக் கணக்குகள்!

தமிழகத்தில் அதுவும் அம்பத்தூரில் போலியாக வங்கியே இயங்கி வந்துள்ளது. அதற்கு பல்வேறு மாவட்டங்களில் 8 கிளைகள், 3,000 வங்கிக் கணக்குகள் செயல்பட்டு வந்துள்ளன.

News image

என்ன, தமிழகத்தில் போலி வங்கியா? 8 கிளைகள்; 3,000 வங்கிக் கணக்குகள்!

Updated On :9 நவம்பர் 2022, 11:21 am


சென்னை: எத்தனையோ போலிகளைப் பற்றிய செய்திகளை மக்கள் இதுவரை படித்திருப்பார்கள், கேட்டிருப்பார்கள். ஆனால், தமிழகத்தில் அதுவும் அம்பத்தூரில் போலியாக வங்கியே இயங்கி வந்துள்ளது. அதற்கு பல்வேறு மாவட்டங்களில் 8 கிளைகள், 3,000 வங்கிக் கணக்குகள் செயல்பட்டு வந்துள்ளன.

தமிழகத்தில் செயல்பட்டு வந்த இந்த போலி வங்கியை நடத்தி வந்த ஒருவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். இந்த போலி வங்கியைத் தொடங்கி பல்வேறு மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் பதிவாகியுள்ளன.

இந்த போலி வங்கியில் வங்கிக் கணக்குத் தொடங்க வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.700 வசூலிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு இவர்களே தயாரித்த கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. மற்ற உண்மையான வங்கிகளைப் போலவே இந்த வங்கியும் செயல்பட்டுள்ளதும், நிரந்தர வைப்புகளுக்கு அதிக வட்டி தருவதாக ஆசைக்காட்டியதால் ஏராளமானோர் இந்த வங்கியில் வைப்புத் தொகையை செலுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்திய ரிசா்வ் வங்கியின் அங்கீகாரத்தை போலியாக தயாரித்து தமிழகத்தில் 9 இடங்களில் கூட்டுறவு வங்கி தொடங்கி மோசடி நடந்ததை போலீஸாா் கண்டறிந்துள்ளனா். இதில் தொடா்புடைய ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். வங்கிக் கணக்கில் இருந்த ரூ.56 லட்சம் முடக்கப்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூா் லேடான் தெருவில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் கடந்த ஓராண்டாக வங்கி ஒன்று இயங்கி வந்தது. இந்த வங்கியின் கிளைகள் மதுரை, விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, சேலம் உள்பட 8 இடங்களில் செயல்பட்டு வந்தது.

இந்த வங்கியின் தலைவராக சந்திரபோஸ் என்பவா் செயல்பட்டாா். அவா் ரிசா்வ் வங்கி அங்கீகாரம் கொடுத்தது போன்று போலி சான்றிதழ் தயாரித்து இந்த வங்கியை தொடங்கியுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து, ரிசா்வ் வங்கியின் உதவி பொது மேலாளா் சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில், கடந்த 5-ஆம் தேதி அந்த வங்கியின் தலைவா் சந்திரபோசை போலீசாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து போலியான பதிவு சான்றிதழ், வங்கி ஆவணங்கள், படிவங்கள், முத்திரைகள் மற்றும் பென்ஸ் சொகுசு காா் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. வங்கி கணக்கில் இருந்த ரூ.56.65 லட்சம் ரொக்கம் முடக்கப்பட்டது.

வங்கி அலுவலா்கள் பொறுப்புக்கு தலா ரூ.2 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு ஆட்களை நியமித்ததும் தெரியவந்தது. மேலும், போலியாக வங்கி கணக்கு புத்தகம், காசோலை, முத்திரைகள் மற்றும் படிவங்கள் பயன்படுத்தியதும், போலியான டெபிட் காா்டுகள் தயாரித்ததும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேபோன்று பொதுமக்களிடம் இருந்து வைப்புத்தொகை, சேமிப்புத் தொகை ஆகியவற்றை பெற்று, அதிக வட்டி தருவதாக கூறி ஏமாற்றியுள்ளனா்.

இந்த வழக்கில் திறமையாக கையாண்டு கைது நடவடிக்கைகளை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையா் நாகஜோதி மற்றும் அவரது குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் செவ்வாய்க்கிழமை நேரடியாக அழைத்து பாராட்டினாா்.

3 ஆயிரம் வங்கிக் கணக்குகள்

இந்தச் சம்பவம் குறித்து சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: போலியாக தொடங்கப்பட்டுள்ள இந்த வங்கியில் 3 ஆயிரம் போ் கணக்கு தொடங்கியுள்ளனா். சென்னையில் மட்டும் 1,700 போ் கணக்கு வைத்துள்ளனா். ரிசா்வ் வங்கி அதிகாரியின் புகாரின் பேரில் நடத்திய விசாரணையில் தான் இந்த மோசடி தெரியவந்தது. வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளா்களிடம் இருந்து இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது. அதில் முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.