அவரைப் பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, அவர் மிகவும் கஞ்சம் என்பதோடு, மற்றபடி நல்லவர்தான் என்றும் கூறியிருக்கிறார்கள். கணக்கு வழக்குகளில் மிகவும் கண்டிப்புடன் இருப்பார் என்றும், காலனி தொடர்பாக சட்ட விவகாரங்களில் அவர் அதிக கவனம் செலுத்துவதோடு, ஆலோசனைகளையும் வழங்குவார் என்று தெரிவித்திருக்கிறார்கள். அந்தக் குடும்பத்தினர் எப்போதும் தெய்வ பக்தி கொண்டவர்களாகவே காட்சியளித்துள்ளனர். ஆனால் இது தவிர வேறு யாரும் அவர்களது வீட்டுக்குள் சென்றது இல்லையாம். அவர்களைப் பற்றிய பல்வேறு விஷயங்கள் இதுவரை ரகசியமாக இருந்துள்ளது. அவர் தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை என்கிறார், நாள்தோறும் அவரை சந்திக்கும் அண்டை வீட்டார். இதில் மிகவும் அதிர்ச்சிக்குரிய தகவல் என்னவென்றால், அவர் கைது செய்யப்படும் வரை அவருக்கும் தேசிய பங்குச் சந்தையும் தொடர்பிருக்கிறது என்பதையே யாருமே அறிந்திருக்கவில்லையாம்.