புது தில்லி: போகிப் பண்டிகை என்றாலே, ஒவ்வொரு ஆண்டும், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை பறைசாற்றும் வகையில், வீட்டில் பயன்படுத்தி, தூக்கி எறியும் பொருள்களை தீயிட்டுக் கொளுத்தி, அதனைக் கொண்டாடுவதுதான்.
சில கிராமங்களில், ஒன்றாக எல்லோரும் ஒரேயிடத்தில் அனைத்துப் பொருள்களையும் தீயிட்டுக் கொளுத்தி, அதனை சுற்றி ஆடியும், பாடியும், மேளமடித்தும் உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள்.
இதையும் படிக்க.. பூஸ்டர் தடுப்பூசி பெயரில் புதிய மோசடி: மக்களே எச்சரிக்கை
நல்ல முறையில் அறுவடை முடிந்திருக்கும் நேரமென்பதாலும், தைத் திருநாளுக்கு முந்தைய நாள் என்பதால், உற்சாகத்துக்கு எந்த வகையிலும் குறைவிருக்காது.
ஆனால், தற்போதிருக்கும் சுற்றுச்சூழல் பிரச்னையில், போகிப் பண்டிகையன்று பழைய பொருள்களைக் போகியில் எரிக்க வேண்டாம் என்று பல்வேறு தரப்பிலும் வேண்டுகோள் வைக்கப்படுகிறது.
ஆனால், எப்படி நாம் பாரம்பரியத்தை விட முடியும், எப்படி போகி கொளுத்தாமல் பண்டிகையைக் கொண்டாடுவது என்று கேட்பவர்களுக்காக சில யோசனைகள்..
கார்பன் பொருள்களை தவிர்க்கலாம்..
எரியும் பொருளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும்போதுதான் புகை வரும். அதாவது காகிதம் அல்லது மரத்தை எரிக்கும் பொது அதிலிருந்து புகை வரும். ஏனெனில் அவற்றில் தண்ணீர், கார்பன், சாம்பல் போன்றவை கலந்திருக்கும். எனவே, ஈரமான பொருள்களை எரிப்பதைத் தவிர்க்கலாம். கரித்தூள், காய்ந்த மரக்கட்டை போன்றவற்றை மட்டும் போகியில் எரிக்கலாம்.
அதிக எரிபொருளை பயன்படுத்தாதீர்கள்..
புகையில்லாமல் எரியும் நெருப்பு பிடிக்க சற்று நேரமாகும். ஆனால், மெல்ல எரிந்து கொண்டேயிருக்கும். எனவே, அதிக எரிபொருளை ஊற்றி பெரிய தீயை உருவாக்க வேண்டாம்.
குப்பை மற்றும் ஈரமான பொருள்களை எரிக்க வேண்டாம்
அதிகமான குப்பைகளையும், ஈரமான பொருள்களையும் போகியில் வீச வேண்டாம். அது அதிகமான புகையை ஏற்படுத்தும்.
எத்தனால் பயன்படுத்தலாம்
ஒரு வேளை குப்பையை எரித்து புகை ஏற்படுவதை விரும்பாத நபராக இருந்தால் எத்தனால் நெருப்புக் கட்டியைப் பயன்படுத்தலாம். இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.
மிகச் சிறிய போகியாக இருக்கலாம்
வெறும் காய்ந்த் இலைகள், குச்சிகள், மரக்கட்டைகளை மட்டும் வைத்து மிகச் சிறிய போகியைக் கொளுத்தலாம். நல்ல காற்றோட்டமான இடத்தில் வைத்து எரிக்கும் போது அதற்கு அதிகப்படியான எரிபொருள் தேவைப்படாது.
போகியும் கொண்டாட வேண்டும். அதிக மாசில்லாமலும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நிச்சயம் இந்த வழிகள் உதவலாம். முயற்சித்துப் பாருங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


