சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் திமுகவுடன் 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முதல் கூட்டணியிலிருக்கும் நிலையில், அந்த கூட்டணியின் அடிப்படையிலேயே மாநிலம் முழுவதும் போட்டியிட்டாலும், அந்த ஃபார்முலா கன்னியாகுமரிக்கு பொருந்தவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும், பல இடங்களில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளின் சார்பில் சில வேட்பாளர்கள் தனியாகவும் களம்கண்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கன்னியாகுமரியில் பலம் அதிகம். எனவே, தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில், மேற்கு கன்னியாகுமரியின் பல்வேறு மாவட்டங்களில் அவர்கள் தனித்து களம்காண்கிறார்கள். இது குறித்து மாவட்ட செயலாளர் ஆர். செல்லசுவாமி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். இங்கு எங்களது பலத்துக்கு ஏற்ற வகையில் இடங்கள் ஒதுக்கப்படவில்லை. அதனால்தான் எங்களது தொண்டர்களுக்கு நியாயம் செய்யும் வகையில், தனியாகப் போட்டியிடுவது என்று முடிவெடுத்தோம். நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம் என்றார்.
கொள்ளங்கோடு நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 32 இடங்களிலும் போட்டியிடுகிறோம். குழித்துறை நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளிலும் போட்டியிடுகிறோம் என்கிறார்.
பத்மநாபபுரம் நகராட்சியி, 7 வார்டுகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதுபோலவே, திமுகவில் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியும் குழித்துறையில் 19 வார்டுகளிலும், கொள்ளங்கோடுவில் 32 வார்டுகளிலும், பத்மநாபபுரத்தில் 11 வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எம். பினுலால் சிங் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், காங்கிரஸ் கட்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுகிறது. காரணம், இடங்கள் ஒதுக்கியதில் ஏற்பட்ட சிக்கலே. திமுகவைச் சேர்ந்தவர்கள் சில இடங்களை கூட்டணிக்குக் கொடுக்கவே மாட்டோம் என்கிறார்கள். ஒரு சில இடங்கள் எங்களுக்கு வேண்டும் எனறு காங்கிரஸ் நினைக்கிறது. அதனால்தான் சுயமாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம் என்கிறார்.
அதேவேளையில், திமுக கட்சியினரோ நிச்சயமாக நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் அனைத்து நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்கள் கருத்தரிக்க உதவும் 10 உணவுகள்!

3வது நாளாக சரிந்த இந்திய பங்குச் சந்தை! சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். செல்கிறார் ஈரானின் வெளியுறவு அமைச்சர்!

இந்த ஆண்டின் மிக வெப்பமான நாள்! தில்லியில் 109.4 டிகிரி வெய்யில்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


