நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

இவைதான் என் குழந்தைகள்: காளைகளுடன் ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் திருநங்கை 

வரும் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக எட்டு காளைகளுக்கு பயிற்சி அளித்து தயாராக இருக்கிறார் திருநங்கை கீர்த்தனா.

News image

எட்டு காளைகளுடன் ஜல்லிக்கட்டுக்குத் தயாரான திருநங்கை 

Updated On :12 டிசம்பர் 2022, 10:34 am

எட்டு காளைகளுடன் ஜல்லிக்கட்டுக்குத் தயாரான திருநங்கை 
மதுரை: வரும் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக எட்டு காளைகளுக்கு பயிற்சி அளித்து தயாராக இருக்கிறார் திருநங்கை கீர்த்தனா.

எட்டு காளைகளுக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக பயிற்சி அளிப்பதையே தனது முழு நேரப் பணியாக செய்து வருகிறார் கீர்த்தனா. காளைகளை பராமரிக்க அவரது மற்ற தோழிகளான திருநங்கைகளும் உதவி செய்து வருகிறார்கள்.

வழக்கமாக ஜனவரி மாதத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி உலகப் புகழ்பெற்றவை. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று காளைகளை அடக்க முடியும். மதுரை மாவட்டம் பொட்டபனையூர் பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா இது பற்றி கூறுகையில், வலிமை மற்றும் வீரத்தைப் பறைசாற்ற பாலினம் தடையல்ல என்பது பல ஆண்டுகாலமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது என்கிறார்.

இது பற்றி கீர்த்தனா மேலும் கூறுகையில், என்னிடம் 8 காளைகள் உள்ளன. வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க அவற்றுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். பலருக்கும் பல துறைகளில் ஆர்வம் இருக்கும். எனக்கு காளைகளுக்கு பயிற்சி அளித்து, பாரம்பரிய விளையாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் ஆர்வம் இருந்தது. எனக்குக் குழந்தைகள் கிடையாது, இந்த காளைகளைத்தான் என் குழந்தைகளாக பாவிக்கிறேன்.

இந்த காளைகள் வெற்றி பெறும்போது, என் பிள்ளைகள் ஒரு போட்டியில் வென்றால் எந்த அளவுக்கு மகிழ்வேனோ, அந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைவேன் என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.