திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இவைதான் என் குழந்தைகள்: காளைகளுடன் ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் திருநங்கை 

வரும் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக எட்டு காளைகளுக்கு பயிற்சி அளித்து தயாராக இருக்கிறார் திருநங்கை கீர்த்தனா.

News image
எட்டு காளைகளுடன் ஜல்லிக்கட்டுக்குத் தயாரான திருநங்கை 
Updated On :1 பிப்ரவரி 2024, 11:05 am

ANI

எட்டு காளைகளுடன் ஜல்லிக்கட்டுக்குத் தயாரான திருநங்கை 
மதுரை: வரும் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக எட்டு காளைகளுக்கு பயிற்சி அளித்து தயாராக இருக்கிறார் திருநங்கை கீர்த்தனா.

எட்டு காளைகளுக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக பயிற்சி அளிப்பதையே தனது முழு நேரப் பணியாக செய்து வருகிறார் கீர்த்தனா. காளைகளை பராமரிக்க அவரது மற்ற தோழிகளான திருநங்கைகளும் உதவி செய்து வருகிறார்கள்.

வழக்கமாக ஜனவரி மாதத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி உலகப் புகழ்பெற்றவை. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று காளைகளை அடக்க முடியும். மதுரை மாவட்டம் பொட்டபனையூர் பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா இது பற்றி கூறுகையில், வலிமை மற்றும் வீரத்தைப் பறைசாற்ற பாலினம் தடையல்ல என்பது பல ஆண்டுகாலமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது என்கிறார்.

இது பற்றி கீர்த்தனா மேலும் கூறுகையில், என்னிடம் 8 காளைகள் உள்ளன. வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க அவற்றுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். பலருக்கும் பல துறைகளில் ஆர்வம் இருக்கும். எனக்கு காளைகளுக்கு பயிற்சி அளித்து, பாரம்பரிய விளையாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் ஆர்வம் இருந்தது. எனக்குக் குழந்தைகள் கிடையாது, இந்த காளைகளைத்தான் என் குழந்தைகளாக பாவிக்கிறேன்.

இந்த காளைகள் வெற்றி பெறும்போது, என் பிள்ளைகள் ஒரு போட்டியில் வென்றால் எந்த அளவுக்கு மகிழ்வேனோ, அந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைவேன் என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.