குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

சீனர்களுக்கு விசா வழங்கியதில் முறைகேடு: சென்னையில் அமலாக்கத் துறை சோதனை

சீனர்களுக்கு விசா வழங்கியதில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

News image
சீனர்களுக்கு விசா வழங்கியதில் முறைகேடு: சென்னையில் அமலாக்கத் துறை சோதனை
Updated On :1 பிப்ரவரி 2024, 9:59 am

PTI


புது தில்லி: சீனர்களுக்கு விசா வழங்கியதில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் வீடுகள் என அமலாக்கத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

பணம் பெற்றுக் கொண்டு சீனர்களுக்கு இந்திய விசா வழங்கியதாக, கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கியது.

பஞ்சாப் மாநிலத்தில் ஒரு நிறுவனத்தின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க சீனர்களுக்கு விசா வழங்கியதில் ரூ.50 லட்சம் அளவுக்கு கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களுக்கு வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கார்த்தி சிதம்பரம் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடமும் விசாரணை நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.