ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

இன்றும் ஒரு மின்சார ஸ்கூட்டர் எரிந்தது

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை, ஒகினவா மின்சார கூட்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது.

News image

இன்றும் ஒரு மின்சார ஸ்கூட்டர் எரிந்தது (கோப்பிலிருந்து..)

Updated On :30 ஏப்ரல் 2022, 12:44 pm


சென்னை: தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை, ஒகினவா மின்சார கூட்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே, சதீஷ் என்பவர் கடந்த ஆண்டு மின்சார ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். வழக்கம் போல இன்று காலை தனது மின்சார ஸ்கூட்டரில் சதீஷ் அலுவலகத்துக்குப் புறப்பட்ட போது, அதிலிருந்து  லேசான புகை வந்துள்ளது.

வாகன ஓட்டுநரின் இருக்கைக்குக் கீழிருந்து புகை வந்ததால், அவர் உடனடியாக இருக்கையை திறந்து பார்த்துள்ளார். அங்கே, ஸ்கூட்டரின் உள்பாகங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதற்குள் ஸ்கூட்டர் முழுவதும் தீ வேகமாகப் பரவி முழுமையாக தீப்பற்றி எரிந்தது.

அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் ஸ்கூட்டரில் பற்றிய தீயை சதீஷ் அணைத்தார். ஆனால் அதற்குள் ஸ்கூட்டர் முற்றிலும் நாசமாகிவிட்டது.

அண்மைக்காலமாக இதுபோன்ற மின்சார ஸ்கூட்டர்கள் திடீரென தீப்பற்றி எரியும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, ஒகினாவா மற்றும் ஓலா நிறுவனங்கள் தங்களது மின்சார வாகனங்களை திரும்பப் பெற்று வருகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.