1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளை திறப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து ஆய்வு அறிக்கையை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார். இதையடுத்து, பள்ளிகள் திறப்பு குறித்து மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோரிடம் முதல்வர் ஆலோசனை நடத்தி, விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடமும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், அது குறித்து தமிழக அரசு கவனமாக கண்காணித்து, உயர்நிலைக் குழுவினருடன் ஆலோசித்து அடுத்தக்கட்டமாக பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
இதையும் படிக்கலாமே.. 1- 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
ஆனால், 1 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது என்பது சற்று சவாலானது என்கிறார்கள் சில பெற்றோர். இது குறித்து தாம்பரத்தைச் சேர்ந்த கல்வி உரிமை ஆர்வலர் கே.எல். விமல் கூறுகையில், தற்போதைய கரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின்படி, ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்க முடியும். அதனால், பல பள்ளிகளும், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வகுப்பறைகளைத்தான், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அமர்ந்து படிக்க ஒதுக்கியுள்ளன. இந்த வேளையில், அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு போதுமான வகுப்பறைகள் இருக்காது. இதனால் சமூக இடைவெளி என்பதை பின்பற்ற முடியாமல் போகலாம் என்கிறார்.
பெற்றோர் இது குறித்து கூறுகையில், சுழற்சி முறையில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை பரிந்துரை செய்துள்ளது. இதனால் பள்ளி ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரிக்கும். ஏற்கனவே, ஆன்லைன் கல்வி முறையால் பள்ளி ஆசிரியர்கள் கடும் பணிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர். சுழற்சி முறை பள்ளியால், மாணவர்களுக்கும் குழப்பம் ஏற்படும் என்று ஆறாம் வகுப்பு மாணவரின் பெற்றோரான ராஜலட்சுமி தனசேகரன் கூறுகிறார்.
பள்ளிகள் உடனடியாக திறக்கப்பட வேண்டும். இல்லையென்றால், பள்ளிகளிலிருந்து இடைநிற்கும் மாணவர்கள், கூலி வேலைக்குச் செல்லும் சிறார்கள் மற்றும் சிறார் திருமணங்கள் அதிகரிக்கும் என்று கவலை தெரிவிக்கிறார் தமிழ்நாடு ஆசிரியர்கள் கழகத்தின் தலைவர் பி.கே. இளமாறன்.
தமிழகத்தில் அதிகமான சிறார் திருமணங்கள் குறித்து புகார்கள் வருகின்றன. பள்ளிகள் திறக்கப்படாததால், சத்துணவு கிடைக்காமல் ஏராளமான குழந்தைகளின் உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளது என்கிறார்.
சுகாதாரத் துறையினரோ, பள்ளிகளைத் திறக்க இதுவே நல்ல நேரம். ஆனால், கரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். சிறார் திருமணம் மற்றும் சிறார் தொழிலாளர்கள் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்றால் பள்ளிகள் திறக்கப்பட வேண்டியது அவசியம். கரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முற்றிலும் பின்பற்ற வேண்டும்.
துவக்கப் பள்ளிகள் குறைந்த வேலை நேரத்தில், இடைவேளை இல்லாமல் செயல்பட அனுமதிக்கலாம் என்கிறார் பொது மருத்துவர் டாக்டர் வி. சுலேகா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்

பெண்கள் கருத்தரிக்க உதவும் 10 உணவுகள்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


