டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஒரே வீட்டை இருவருக்கு விற்று மோசடி; வழக்குப் பதிவு

ஒரே வீட்டை இரண்டு நபர்களுக்கு விற்பனை செய்த புகாரின் கீழ், குடியிருப்பு கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது ஒப்படைப்பு ஆவண முறைகேடு அமைப்பு வழக்குப் பதிவு செய்துள்ளது.

News image
ஒரே வீட்டை இருவருக்கு விற்று மோசடி; வழக்குப் பதிவு
Updated On :28 ஜனவரி 2024, 4:23 am

ENS


சென்னை: ஒரே வீட்டை இரண்டு நபர்களுக்கு விற்பனை செய்த புகாரின் கீழ், குடியிருப்பு கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது ஒப்படைப்பு ஆவண முறைகேடு அமைப்பு வழக்குப் பதிவு செய்துள்ளது.

சென்னை மத்திய குற்றவியல் அமைப்பின் கிளையான ஒப்படைப்பு ஆவண முறைகேடு அமைப்பு, வீட்டை ஒரு நபருக்கு விற்பனை செய்வதாகக் கூறி பணத்தை வாங்கிக் கொண்டு, அதனை வேறொரு நபருக்கு விற்றதாகக் கூறிய புகாரின் கீழ், கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலக உணவு நாள் சிறப்புக் கட்டுரை: பிரியாணியும் பழைய சோறும்

இது தொடர்பான புகார் 2017ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட நிலையில், ஒப்படைப்பு ஆவண முறைகேடு அமைப்பு சில மாதங்களுக்கு முன்புதான் நம்பிக்கைக்கு எதிராக செயல்படுதல், முறைகேடு செய்தல், ஏமாற்றுதல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.  லேண்ட்மார்க் கட்டுமான நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டி. உதயகுமார் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.

கோபாலபுரத்தில், மிக உயர் மதிப்புள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் வெர்டிகா என்ற திட்டத்தை இந்தக் குழுமம் தொடங்கியது.

"கடந்த 2013ல், புகார்தாரர் உதயகுமாரை நாடியுள்ளார், வீடு வாங்க, தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக, தனியார் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கித் தருவதாக உதயகுமார் உறுதி அளித்துள்ளார். இதனடிப்படையில், வீட்டை முன்பதிவு செய்யும் வகையில் புகார்தாரர் 2 கோடியை உதயகுமாருக்குக் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார். பிறகு, வங்கிக் கடன் மூலம் 4 கோடி பெறப்பட்டுள்ளது.

புகார்தாரர் 4 கோடிக்கு மாதத் தவணை செலுத்தி வரும் நிலையில், தான் முன்பதிவு செய்த வீட்டை உதயகுமார் வேறொருவருக்கு 2017ல் விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது. அந்த வீட்டிற்கு போலி ஆவணங்கள் தயாரித்து அதை வைத்து தனியார் வங்கியில் மற்றொரு வீட்டுக் கடன் வாங்கி விற்பனை செய்துள்ளார். அதாவது ஒரே வீட்டை இரண்டு பேருக்கு விற்றுள்ளதாக புகாரில் கூறப்பட்டிருப்பதாக " காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கால அவகாசம் அவதால், அதிருப்தி அடைந்த புகார்தாரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்து, இந்த வழக்கில் 90 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவைப் பெற்றார். மேலும், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு செப்டம்பரில் மற்றொரு மனு தாக்கல் செய்தார். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், வழக்குப் பதிவு சேய்து, விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஆதாரங்களைத் திரட்டி வருவதாகவும் பதிலளித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.