சென்னை: ஒரே வீட்டை இரண்டு நபர்களுக்கு விற்பனை செய்த புகாரின் கீழ், குடியிருப்பு கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது ஒப்படைப்பு ஆவண முறைகேடு அமைப்பு வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னை மத்திய குற்றவியல் அமைப்பின் கிளையான ஒப்படைப்பு ஆவண முறைகேடு அமைப்பு, வீட்டை ஒரு நபருக்கு விற்பனை செய்வதாகக் கூறி பணத்தை வாங்கிக் கொண்டு, அதனை வேறொரு நபருக்கு விற்றதாகக் கூறிய புகாரின் கீழ், கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலக உணவு நாள் சிறப்புக் கட்டுரை: பிரியாணியும் பழைய சோறும்
இது தொடர்பான புகார் 2017ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட நிலையில், ஒப்படைப்பு ஆவண முறைகேடு அமைப்பு சில மாதங்களுக்கு முன்புதான் நம்பிக்கைக்கு எதிராக செயல்படுதல், முறைகேடு செய்தல், ஏமாற்றுதல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. லேண்ட்மார்க் கட்டுமான நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டி. உதயகுமார் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.
கோபாலபுரத்தில், மிக உயர் மதிப்புள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் வெர்டிகா என்ற திட்டத்தை இந்தக் குழுமம் தொடங்கியது.
"கடந்த 2013ல், புகார்தாரர் உதயகுமாரை நாடியுள்ளார், வீடு வாங்க, தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக, தனியார் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கித் தருவதாக உதயகுமார் உறுதி அளித்துள்ளார். இதனடிப்படையில், வீட்டை முன்பதிவு செய்யும் வகையில் புகார்தாரர் 2 கோடியை உதயகுமாருக்குக் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார். பிறகு, வங்கிக் கடன் மூலம் 4 கோடி பெறப்பட்டுள்ளது.
புகார்தாரர் 4 கோடிக்கு மாதத் தவணை செலுத்தி வரும் நிலையில், தான் முன்பதிவு செய்த வீட்டை உதயகுமார் வேறொருவருக்கு 2017ல் விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது. அந்த வீட்டிற்கு போலி ஆவணங்கள் தயாரித்து அதை வைத்து தனியார் வங்கியில் மற்றொரு வீட்டுக் கடன் வாங்கி விற்பனை செய்துள்ளார். அதாவது ஒரே வீட்டை இரண்டு பேருக்கு விற்றுள்ளதாக புகாரில் கூறப்பட்டிருப்பதாக " காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கால அவகாசம் அவதால், அதிருப்தி அடைந்த புகார்தாரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்து, இந்த வழக்கில் 90 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவைப் பெற்றார். மேலும், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு செப்டம்பரில் மற்றொரு மனு தாக்கல் செய்தார். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், வழக்குப் பதிவு சேய்து, விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஆதாரங்களைத் திரட்டி வருவதாகவும் பதிலளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!

5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை!

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

வாழ்க்கை மீதான பேராவல் - நூல் அறிமுகம் | விமர்சனம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


