ஈரோடு: ஈரோடு மாவட்டம் பர்கூர் வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த 40 வயது பெண் யானை மரணமடைந்ததாக வனத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
பர்கூர் வனப்பகுதிக்கு உள்பட்ட கோவில்நத்தம் ஓங்கேபள்ளம் பகுதியில், பெண் யானை ஒன்று பள்ளத்தில் விழுந்துக் கிடப்பதைப் பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்குத் தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த வனத்துறையினரும், கால்நடை மருத்துவர்களும், யானையை பரிசோதித்தனர். யானையை முழுமையாக சோதனை செய்த கால்நடை மருத்துவர்கள், வயது காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த யானை, பள்ளத்தில் விழுந்ததில், எழுந்து வர முடியாமல் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
இதில் சந்தேகத்துக்கிடமான வகையில் எதுவும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. யானையின் உடலை அடக்கம் செய்யத் தேவையான நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


