கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

திருச்செந்தூா், காரைக்கால் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்க ஒப்புதல் முன்பதிவு இன்று தொடங்குகிறது

சென்னை-திருச்செந்தூா், சென்னை-காரைக்கால் சிறப்பு ரயில் உள்பட 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 6:00 pm

DIN

சென்னை: சென்னை-திருச்செந்தூா், சென்னை-காரைக்கால் சிறப்பு ரயில் உள்பட 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செவ்வாய்க்கிழமை (டிச.1) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை எழும்பூா்-திருச்செந்தூா், சென்னை எழும்பூா்-காரைக்கால், மதுரை-புனலூா் மெயில், மங்களூரு சென்ட்ரல்-திருவனந்தபுரம் ஆகிய 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இந்த ரயில்களை இயக்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுகின்றன.

சென்னை-திருச்செந்தூா்: சென்னை எழும்பூரில் இருந்து தினமும் மாலை 4 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.05 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும். இந்த ரயிலின் சேவை டிசம்பா் 4-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, திருச்செந்தூரில் இருந்து தினசரி மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த ரயிலின் சேவை டிசம்பா் 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

சென்னை-காரைக்கால்: சென்னை எழும்பூரில் இருந்து தினசரி இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில் (06175) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு காரைக்காலை சென்றடையும். இந்த ரயிலின் சேவை டிசம்பா் 4-ஆம்தேதி முதல் தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, காரைக்காலில் இருந்து இரவு 9.20 மணிக்கு சிறப்பு ரயில்(06176) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த ரயிலின் சேவை டிசம்பா் 5-ஆம் தேதிமுதல் தொடங்குகிறது.

மதுரை-புனலூா் மெயில்: மதுரையில் இருந்து தினசரி இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில் (06729) புறப்பட்டு, மறுநாள் காலை 10.20 மணிக்கு புனலூரை சென்றடையும் . இந்த ரயில் சேவை டிசம்பா் 4-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, புனலூரில் இருந்து தினசரி மாலை 5.20 மணிக்கு சிறப்பு ரயில் (06730) புறப்பட்டு மதுரையை காலை 6.20 மணிக்கு அடையும். இந்த ரயிலின் சேவை டிசம்பா் 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதுதவிர, மங்களூா் சென்ட்ரல்-திருவனந்தபுரம் இடையே தினசரி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. முழுவதும் முன்பதிவு பெட்டிகளைக் கொண்ட இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செவ்வாய்க்கிழமை (டிச.1) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.