மும்பை: கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மும்பையைச் சேர்ந்த 70 கரோனா நோயாளிகள் மாயமாகியிருப்பதாக பிரிஹன்மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இந்த விஷயத்தில் பொதுமக்களின் உதவியையும் மாநகராட்சி கோரியுள்ளது.
மும்பையின் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த கரோனா நோயாளிகள் பிரிஹன்மும்பை மாநகராட்சியின் மலட் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் தங்களது செல்லிடப்பேசியை அணைத்து வைத்திருப்பதால் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. காணாமல் போன கரோனா நோயாளிகளைக் கண்டுபிடிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையின் உதவியை நாடியுள்ளனர் என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் மட்டும் கரோனா பாதிப்பு 67 ஆயிரத்தை எட்டிவிட்ட நிலைடியில், மாநகராட்சி அதிகாரிகள், வீடு வீடாகச் சென்று கரோனா பரிசோதனை நடத்தி, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாயமான நோயாளிகளின் செல்லிடப்பேசி எண்கள், ஆதார் எண் மற்றும் இதர விவரங்களையும் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளோம். இதன் மூடுலம் அவர்கள் நோயாளிகளை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். நோயாளிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் போது அவர்களிடம் இருந்து பெற்றப்பட்ட விவரங்கள் இவை.
இவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர் தொழிலாளர்கள் என்று தெரிய வந்துள்ளதால், இவர்கள் மும்பையில் இருக்கிறார்களா அல்லது அவர்களது ஊர்களுக்குத் திரும்பி விட்டனரா என்பதும் தெரியவில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.
இதற்கிடையே ஜல்கோன் பகுதியில் கரோனா உறுதி செய்யப்பட்ட 82 வயது பெண்மணி 8 நாள்களுக்கு முன்பு காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில், அதே மருத்துவமனையின் கழிவறையில் அவர் சலடமாகக் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


