சென்னை: கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்க ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட 72 வயது முதியவர் மாயமாகிவிட்டதாக அவரது மகன் புகார் அளித்துள்ளார்.
மாயமான நபர் ஆதிகேசவன் (72) என்பது தெரிய வந்துள்ளது. இவருக்கு ஜூன் 10-ம் தேதி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநகராடசி ஊழியர்கள் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர். அவருடன் ஆம்புலன்ஸில் மேலும் 5 பேரும் இருந்துள்ளனர். ஆதிகேசவனிடம் செல்லிடப்பேசியும் இல்லை.
தந்தை ஆதிகேசவன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருப்பதாக துப்புரவு ஆய்வாளரும் உறுதி செய்துள்ளார். மேலும், அவர் உள்பட அனைத்து நோயாளிகளையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் எக்ஸ்-ரே பிரிவில் இறக்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இது பற்றி, அந்த ஆய்வாளர் கூறுகையில் கரோனா பரிசோதனைக் கூடத்தில் இருந்து நோயாளிகள் எந்தெந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்ற பட்டியல் எங்களுக்கு வரும். ஆனால் மருத்துவமனையில் தரப்பில் இருந்து வராது. ஆதிகேசவனின் மகன் என்னைத் தொடர்பு கொண்ட போது, அவருடன் அனுமதிக்கப்பட்ட மற்றொரு நோயாளியை தொடர்பு கொண்டு, கேட்டேன். அவரும் தன்னுடன் வயதான ஒரு நபரும் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். எனவே, மகனிடம் அதை உறுதி செய்தேன்.
ஏதோ ஒரு சந்தேகம் ஏற்பட்டு, தனது தந்தையின் புகைப்படத்தை, மகன், சக நோயாளியின் செல்லிடப்பேசிக்கு அனுப்பி வைத்த போது, புகைப்படத்தில் இருப்பவர் தங்களுடன் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மருத்துவமனையில் ஆதிகேசவன் என்று நோயாளி யாரும் அனுமதிக்கப்பட்வில்லை என்றும் கூறிவிட்டனர்.
இது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் மருத்துவர் வந்தாமணி கூறுகையில், வயதான நபர் இந்த மருத்துவமனை வளாகத்துக்குள் வரவில்லை. அவர் உள்ளே வந்திருந்தால், அதற்கு சில ஆதாரங்கள் இருந்திருக்கும். மருத்துவமனைக்கு வரும் கரோனா நோயாளிகள் குறித்து மூன்று விதமாக பதிவு செய்யப்படுகிறது. ஆனால் அவரது பெயர் இங்கு பதிவாகவில்லை. அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே மாயமாகியிருக்கலாம் அல்லது மருத்துவமனைக்குள் வரும் போது மாயமாகியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் அவரது மகன் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
வீடியோக்கள்

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...
Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore
தினமணி வீடியோ செய்தி...

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

