சென்னை: கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்க ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட 72 வயது முதியவர் மாயமாகிவிட்டதாக அவரது மகன் புகார் அளித்துள்ளார்.
மாயமான நபர் ஆதிகேசவன் (72) என்பது தெரிய வந்துள்ளது. இவருக்கு ஜூன் 10-ம் தேதி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநகராடசி ஊழியர்கள் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர். அவருடன் ஆம்புலன்ஸில் மேலும் 5 பேரும் இருந்துள்ளனர். ஆதிகேசவனிடம் செல்லிடப்பேசியும் இல்லை.
தந்தை ஆதிகேசவன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருப்பதாக துப்புரவு ஆய்வாளரும் உறுதி செய்துள்ளார். மேலும், அவர் உள்பட அனைத்து நோயாளிகளையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் எக்ஸ்-ரே பிரிவில் இறக்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இது பற்றி, அந்த ஆய்வாளர் கூறுகையில் கரோனா பரிசோதனைக் கூடத்தில் இருந்து நோயாளிகள் எந்தெந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்ற பட்டியல் எங்களுக்கு வரும். ஆனால் மருத்துவமனையில் தரப்பில் இருந்து வராது. ஆதிகேசவனின் மகன் என்னைத் தொடர்பு கொண்ட போது, அவருடன் அனுமதிக்கப்பட்ட மற்றொரு நோயாளியை தொடர்பு கொண்டு, கேட்டேன். அவரும் தன்னுடன் வயதான ஒரு நபரும் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். எனவே, மகனிடம் அதை உறுதி செய்தேன்.
ஏதோ ஒரு சந்தேகம் ஏற்பட்டு, தனது தந்தையின் புகைப்படத்தை, மகன், சக நோயாளியின் செல்லிடப்பேசிக்கு அனுப்பி வைத்த போது, புகைப்படத்தில் இருப்பவர் தங்களுடன் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மருத்துவமனையில் ஆதிகேசவன் என்று நோயாளி யாரும் அனுமதிக்கப்பட்வில்லை என்றும் கூறிவிட்டனர்.
இது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் மருத்துவர் வந்தாமணி கூறுகையில், வயதான நபர் இந்த மருத்துவமனை வளாகத்துக்குள் வரவில்லை. அவர் உள்ளே வந்திருந்தால், அதற்கு சில ஆதாரங்கள் இருந்திருக்கும். மருத்துவமனைக்கு வரும் கரோனா நோயாளிகள் குறித்து மூன்று விதமாக பதிவு செய்யப்படுகிறது. ஆனால் அவரது பெயர் இங்கு பதிவாகவில்லை. அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே மாயமாகியிருக்கலாம் அல்லது மருத்துவமனைக்குள் வரும் போது மாயமாகியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் அவரது மகன் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

