விளையாட்டு வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டிய சங்க நிர்வாகிகள், பார்ம் 1,2, 3, 4 ஆகிய சான்றிதழ்களை வழங்குவதற்கு கிடைத்துள்ள அதிகாரம், மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் தொடங்கி முதல்வர் வரை தங்களுக்கான தொடர்புகளை விரிவுப்படுத்திக் கொள்வதற்காகவும், வேலைவாய்ப்பு தேர்வின் போது தேர்வுக் குழு உறுப்பினர் பதவிகளை பிடிப்பதற்கும் மட்டுமே முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இதனால் விளையாட்டு வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் அரசின் நிதி வீணடிக்கப்படுவது மட்டுமின்றி, அங்கீகாரம் இல்லாத சங்கங்களை நம்பி விளையாட்டு வீரர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.