பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆற்காடு கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அனுசரிக்கப்பட்டது.

News image
ஆற்காடு கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு
Updated On :27 ஜனவரி 2024, 6:02 pm

DIN


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் வளவனூர் அன்பழகன் தலைமை வகித்து அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலை அணிவித்து தீபாராதனை செய்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வி.கே.ஆர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

இதில், ஒன்றிய பொருளாளர் நாராயணன் மாவட்ட பிரதிநிதி பாலாஜி. ஹரிதாஸ் பொதுக்குழு உறுப்பினர் தாகு கணேசன். முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சிகாமணி. ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் உமாபதி உள்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.