இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

திருச்சி மண்டலத்தில் 44 ரயில் பெட்டிகள் கரோனா வார்டுகளாக மாற்றம்

தெற்கு ரயில்வேயின் திருச்சி மண்டலத்தில் 44 ரயில் பெட்டிகள் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:32 pm

IANS

தெற்கு ரயில்வேயின் திருச்சி மண்டலத்தில் 44 ரயில் பெட்டிகள் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சுமார் 573 ரயில் பெட்டிகளை கரோனா வார்டுகளாக மாற்றும்படி தெற்கு ரயில்வேக்கு இந்திய ரயில்வே இலக்கு நிர்ணயித்திருந்தது.

இதையடுத்து திருச்சி, பெரம்பூர், மதுரை, சேலம் ரயில் பணிமனைகளில் இந்த பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை திருச்சி பணிமனையில் 44 ரயில் பெட்டிகள் கரோனா வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பொறுத்துவது, திரைச்சீலைகளைப் போடுவது, குப்பைத் தொட்டிகள் வைப்பது என பல்வேறு பணிகளும் இதில் அடங்கும். இந்த 44 ரயில் பெட்டிகளும், அவசர காலத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.