பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

சரியாப்போச்சு! இந்த தொழிலிலும் நுழைந்து விட்டார்களா வட மாநில தொழிலாளர்கள்?

ஹோட்டல், கட்டட வேலை என பல வேலைகளில், உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்புகளை எல்லாம் தட்டிப் பறித்த வடமாநில தொழிலாளர்கள் தற்போது விவசாயத்திலும் நுழைந்து விட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியு

News image
Updated On :30 செப்டம்பர் 2019, 5:55 am


ஹோட்டல், கட்டட வேலை என பல வேலைகளில், உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்புகளை எல்லாம் தட்டிப் பறித்த வடமாநில தொழிலாளர்கள் தற்போது விவசாயத்திலும் நுழைந்து விட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நல்ல சம்பளம், அதிக வேலை வாய்ப்பு போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட ஏராளமான வட மாநில இளைஞர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

கட்டட வேலைகள், ஹோட்டல்கள் என எங்கு பார்த்தாலும் வட இந்திய மாநில இளைஞர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் ஒரு சில கிராமங்களில் விவசாயப் பணிகளிலும் வட இந்திய இளைஞர்கள் நுழைந்துள்ளனர்.

கரூர் மாவட்டம் பிள்ளப்பாளையம் பஞ்சாயத்துப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்ட வட இந்திய இளைஞர்கள் விவசாயப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

நடவு நடுதல், களைப் பிடுங்குதல் போன்ற பணிகளை அவர்கள் செய்து வருகிறார்கள். 

இது பற்றி அங்கிருந்த இளைஞர்களைக் கூட்டி வந்தவர் கூறுகையில், தற்போது எங்கள் கிராமங்களில் எந்த வேலையும் இல்லை. தமிழகத்தில் விவசாயத்துக்கு அதிகக் கூலி தருகிறார்கள். அதனால் இங்கே வந்தோம் என்கிறார்.

இங்கு இரண்டு மாதங்கள் தங்கியிருந்து விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதுபோன்ற வேலைகளை நாங்கள் ஏற்கனவே ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் செய்துள்ளோம் என்கிறார்கள்.

4 ஏக்கர் விவசாய நிலத்துக்குச் சொந்தக்காரரான இன்பராஜ், வடமாநில இந்தியர்களை பணிக்கு வைத்திருப்பது பற்றி கூறுகையில், கடினமாக வேலை செய்கிறார்கள். வேகமாகவும் பணியாற்றுகிறார்கள் என்கிறார்.

உள்ளூர் விவசாயிகளை விட, இவர்களுக்கு மிகக் குறைவாகவே செலவாகிறது. அதுமட்டுமல்ல, உள்ளூர்  கூலி ஆட்களுக்கு காபி, டீ, உணவு எல்லாம் கொடுக்க வேண்டும். இவர்களுக்கு அந்த செலவும் மிச்சம் என்கிறார்.

உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்புகளை எல்லாம் பறிக்கும் வகையில் வட மாநில இளைஞர்கள் எல்லாத் துறைகளிலும் நுழைந்துவிட்ட நிலையில், தற்போது விவசாயத்திலும் அவர்கள் நுழைந்திருப்பது நிச்சயம் வரமில்லை.. சாபம் என்றுதான் தோன்றுகிறது.

உள்ளூர் மக்களுக்கு இங்கு வேலை வாய்ப்பில்லாத நிலையை ஏற்படுத்திவிட்டால், தமிழக கூலிகள் எல்லாம் வேலை தேடி வெளியூர்தான் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.