தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருடர்கள் பலவிதம்: சிசிடிவி கேமராவைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்ட திருடன்!

திருடர்கள் பலவிதம் அதில் நாம் இப்போது பார்க்கவிருப்பது, திருட வந்த வீட்டின் வாசலில் இருந்த சிசிடிவி கேமராவைக் கண்டவுடன் தலையில் அடித்துக் கொண்டு கொள்ளை முயற்சியைக் கைவிட்ட திருடனைப் பற்றி.

News image

சிசிடிவி கேமராவைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்ட திருடன்!

Updated On :9 அக்டோபர் 2019, 7:08 am

திருடர்கள் பலவிதம் அதில் நாம் இப்போது பார்க்கவிருப்பது, திருட வந்த வீட்டின் வாசலில் இருந்த சிசிடிவி கேமராவைக் கண்டவுடன் தலையில் அடித்துக் கொண்டு கொள்ளை முயற்சியைக் கைவிட்ட திருடனைப் பற்றி.

சென்னை குரோம்பேட்டை அருகே கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவன் திடீரென சிசிடிவி கேமராவைக் கண்டவுடன் சோகத்துடன் தலையில் அடித்துக் கொண்டு கொள்ளை முயற்சியை கைவிட்டுச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சிட்லபாக்கம் ஜெயா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஸ்ரீதர் என்பவரது வீட்டில் வாயில் கதவை, நீண்ட ராடைக் கொண்டு திருடன் உடைக்கிறார். பெரும் முயற்சிக்கு பிறகு வீட்டுக் கதவின் வெளியே உள்ள இரும்பு கேட்டின் பூட்டை உடைக்கும் கொள்ளையன் உள்ளே செல்கிறான்.

பிறகு கதவின் பூட்டை உடைக்கும் முன்பாக அங்கு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருப்பதை அவன் பார்த்து விடுகிறான். இதனை தொடர்ந்து தனது தலையில் அடித்துக் கொள்கிறான். பின்னர் பூட்டை உடைத்து திறந்த இரும்பு கேட்டை மூடிவிட்டு கொள்ளையன் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறான்.

வெளியூர் சென்று வந்த வீட்டு உரிமையாளர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது இந்த காட்சிகள் சிக்கியுள்ளன.

புகாரின் பேரில் சிட்லபாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே, திருட வந்த வீட்டில் ஊஞ்சலாடிச் சென்ற கொள்ளையன், வேலூர் அருகே பாஸ்தா செய்து சாப்பிட்டுச் சென்ற கொள்ளையர்கள் வரிசையில் இவரும் இணைந்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.