தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

லலிதா ஜுவல்லரி கொள்ளைத் தலைவன் முருகனின் பின்னணி என்ன?

கொள்ளைத் தலைவன், படத்தயாரிப்பில் ஈடுபாடு, பல மொழிகள் என `பன்முக' நபராக விளங்கியிருக்கும் முருகன் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ..

News image
Updated On :7 அக்டோபர் 2019, 9:34 am

கொள்ளைத் தலைவன், படத்தயாரிப்பில் ஈடுபாடு, பல மொழிகள் என `பன்முக' நபராக விளங்கியிருக்கும் முருகன் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ..

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் என்பவர் போலீஸாரிடம் பிடிபட்டார். மோட்டார் சைக்கிளில் மணிகண்டன் சென்றபோது, போலீஸார் மடக்கிப்பிடித்துள்ளனர். அப்போது, மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையிலிருந்த மற்றொரு கொள்ளையன் சுரேஷ் தப்பி ஓடிவிட்டார். மணிகண்டனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் கொள்ளைக்கும்பல் தலைவனாக திருவாரூரைச் சேர்ந்த முருகன் செயல்பட்டுவந்தது தெரியவந்தது.

முருகன் தலைமையிலான கும்பல் தென் மாநிலம் முழுவதுமே கைவரிசையைக் காட்டியுள்ளது. பெங்களூரில் முதலில் கொள்ளையில் ஈடுபட்டு, பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்ட முருகன், பின்னர் தன் ஜகாவை ஆந்திராவுக்கு மாற்றிக்கொண்டான். முருகன் ஒரு சினிமா பைத்தியம் என்று சொல்லப்படுகிறது. கொள்ளையடிக்கும் பணத்தைக் கொண்டு, ரூ.50 லட்சம் செலவில் தெலுங்குப் படத்தைத் தயாரித்துள்ளார். பல பெண்களுடன் தொடர்பு இருந்ததால், முருகனை ஹெச்.ஐ.வியும் தாக்கியுள்ளது.

ஒரு முறை, ஆந்திராவில் மக்பூப் நகர் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கொள்ளையில் ஈடுபட்ட முருகன் கும்பல் பிடிபட்டது. ஆனால், ஒவ்வொரு வழக்கிலும் ஜாமீனில் வெளிவரும் முருகன் தலைமையிலான கும்பல் கொள்ளையடிப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை. ஆந்திர கொள்ளைச் சம்பவத்தில் ஜாமீனில் வெளிவந்த பிறகு, சென்னை அண்ணாநகர் பகுதியில் தொடர் கொள்ளையில் முருகன் தலைமையிலான கும்பல் ஈடுபட்டுள்ளது

திருவாருர் சீராதோப்பு பகுதியில்தான் முருகனின் காதலி மஞ்சு வசித்து வருகிறார். சொந்த ஊரில் சாக வேண்டுமென்பது முருகனின் ஆசையாம். திருவாரூர் மாவட்டத்தில் முருகன் மீது எந்த வழக்கும் இல்லை. பல மொழிகள் சரளமாகப் பேசவும் தெரியும். சொந்த ஊருக்கு வரும்போது, கண்ணில் பார்க்கும் மக்களுக்குப் பண உதவிகள் செய்து வந்துள்ளார். இதனால், கொள்ளைச் சம்பவங்களில் முருகன் ஈடுபடுவது தெரிந்தாலும், சொந்த ஊர் மக்கள் அவரை காட்டிக் கொடுக்காமல் இருந்துள்ளனர்.

பார்ப்பதற்குப் பரிதாபமாக ஒல்லியாக காணப்படும் முருகன் திட்டமிட்டுக் கொள்ளையடிப்பதில் திறமையாகச் செயல்படுவார் என்றும் போலீஸார் கூறுகின்றனர். தப்பியோடிய சுரேஷ் , முருகனின் அக்காள் மகன் ஆவார். சுரேஷையும் கொள்ளையில் ஈடுபட்ட மற்றவர்களையும் பிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.