சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

இடைத்தேர்தலால் குடிகாரர்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்கள் கொஞ்சமா? நஞ்சமா?

வெயிலோ மழையோ வாக்குப்பதிவு நாளோ, வாக்கு எண்ணிக்கை நாளோ. எங்களுக்கு அந்தந்த நாளுக்கான தேவை அன்றன்று பூர்த்தியாக வேண்டும். அவ்வளவுதான்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:57 am

ENS


மதுரை: வெயிலோ மழையோ வாக்குப்பதிவு நாளோ, வாக்கு எண்ணிக்கை நாளோ. எங்களுக்கு அந்தந்த நாளுக்கான தேவை அன்றன்று பூர்த்தியாக வேண்டும். அவ்வளவுதான்.

ஆனால் இவர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத மாவட்ட நிர்வாகம், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவித்துவிட்டது.

வார இறுதி நாளும், இப்படி விடுமுறையும் ஒன்றாக வந்து சேர்ந்ததால் திக்குமுக்காடிப் போய்விட்டார்கள் குடிகாரர்கள். அதற்காக அப்படியே இருந்துவிட முடியுமா?

அருகில் இருக்கும் அண்டை மாவட்டங்களை நோக்கி படையெடுத்தார்கள். அதன் பலனாக சிவகங்கை மாவட்டத்தில் இருந்த டாஸ்மாக் கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. ஒரு கட்டத்தில் நீண்ட வரிசையும் காணப்பட்டது.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த டாஸ்மாக் கடைகளில் காவல்துறையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  வரிசையில் காத்திருந்தவர்கள் அனைவருமே மதுரையைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். 

இது பற்றி சிலர் கூறுகையில், எங்கள் பகுதியிலேயே கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது விற்பனை நடக்கிறது. அதற்கு பதில் இங்கே வந்து மதுவாங்கிச் செல்கிறோம் என்றனர். சிலர் டாக்ஸி வைத்து மதுரையில் இருந்து சிவகங்கை வந்து மதுபானங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

மதுரை - சிவகங்கை எல்லைப் பகுதியில் அமைந்திருந்த டாஸ்மாக் கடைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று மது வகைகளை வாங்கிச் சென்றதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.