நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ராமலிங்கம் கொலைக் குற்றவாளி கைது: தேசிய புலனாய்வு முகமை அதிரடி

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கியக் குற்றவாளி புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:52 am

ANI

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கியக் குற்றவாளி திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் ராமலிங்கம் சில மாதங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட வழக்கை, கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியான, மணப்பாறையை அடுத்த இளங்காக்குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த கமாலுதீன் மகன் முகமது பாரூக் (46) என்பவரை, புதன்கிழமை இரவு தேசிய புலனாய்வு முகமை உதவி காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீஸார், இளங்காக்குறிச்சிக்குச் சென்று கைது செய்தனர். 

இதையடுத்து திருச்சி ஐ.ஜி. அலுவலகத்தில் அவரை ஒப்படைத்தனர். மேலும், தேசிய புலானாய்வு முகமை உதவி காவல் கண்காணிப்பாளர் சவுகத் அலி தலைமையிலான போலீஸார் முகமது பாரூக் வீட்டில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.

ராமலிங்கம் கொலை குற்றத்துக்கு காரணமாக கமாலுதீன் வீடு உட்பட மொத்தம் 20 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கமாலுதீன் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். தமிழக காவல்துறை இதுவரை 10 பேரை கைது செய்துள்ளது, 6 பேர் தலைமறைவாகியுள்ளனர் என்று தேசிய புலானாய்வு முகமை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.