ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பொள்ளாச்சி வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல்துறை கூறும் அறிவுரை

பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களை துன்புறுத்தி, வன்கொடுமை செய்து, அவர்களிடம் இருந்து பணம், நகை பறித்த கும்பலிடம் சிக்கிய 2வது பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

News image
Updated On :12 மார்ச் 2019, 5:34 am


கோவை: பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களை துன்புறுத்தி, வன்கொடுமை செய்து, அவர்களிடம் இருந்து பணம், நகை பறித்த கும்பலிடம் சிக்கிய 2வது பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் 19 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி விடியோ எடுத்து மிரட்டிய புகாரின் கீழ் 4 முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களின் செல்போனில் இருந்து 4 விடியோக்களை ஆய்வு செய்து அதன் மூலம் இந்த கும்பலிடம் சிக்கிய 2வது பெண்ணின் அடையாளத்தை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து கோவை காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, குற்றவாளிகளின் செல்போனில் இருந்து 4 விடியோக்களை ஆய்வு செய்து ஒரு பெண்ணை அடையாளம் கண்டுள்ளோம். அந்த பெண் திருமணமானவர். அவர் தைரியத்தோடு காவல்நிலையத்துக்கு வந்த புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். இல்லையென்றால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த செல்போன்களில் ஏராளமான விடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போல கடந்த 2 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த இளம் பெண்களின் வழக்குகளையும் தூசு தட்டி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, பொதுமக்களும் முன்வந்து புகார் அளிக்க வேண்டும். உங்களுக்கு காவல்துறையிடம் புகார்  அளிக்க விருப்பமில்லை எனில், நீதிபதியிடம் நேரடியாக முறையிடலாம் என்று பொள்ளாச்சி டிஎஸ்பி கே. ஜெயராமன் கூறியுள்ளார்.

இந்த வழக்கில், அரசியல் பிரமுகர்கள் சிலரின் பெயர்களும் இடம்பெறுவதால் இது தமிழகத்தில் பெரிய அளவில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை மிரட்டிய வழக்கில், அதிமுகவின் இளைஞர் அணி உறுப்பினர் பொள்ளாச்சி நாகராஜன் நேற்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். 

எதிர்க்கட்சிகள் என் மீது பழிபோட நினைக்கிறார்கள். ஆனால், உண்மையான குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், டிஜிபியை சந்தித்து வழக்கு தொடர்பாக தான் பேசியதாகவும் பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம் அளித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.