கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

சென்னையில் இன்று: தண்ணீர் இல்லாததால் ஒரு நாள்விட்டு ஒரு நாள் பள்ளி செல்லும் சிறார்கள்

தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், குளிக்கத் தண்ணீர் இல்லாததால் காலிக் குடங்களுடன் சிறார்கள் சாலைகளில் அலையும் காட்சியைக் காண முடிகிறது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:21 am

ENS


சென்னை: தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், குளிக்கத் தண்ணீர் இல்லாததால் காலிக் குடங்களுடன் சிறார்கள் சாலைகளில் அலையும் காட்சியைக் காண முடிகிறது.

தர்ஷிணி (9), பிரியா (11) இருவரும் ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் பள்ளிக்குச் செல்கிறார்களாம். காரணம், ஒரு நாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வருவதால், தண்ணீர் பிடிக்க வேண்டும் என்பதால் பள்ளிச் செல்வதை தவிர்த்துவிடுகிறார்களாம்.

வியாசார்பாடியில் கன்னிகாபுரத்தில் இருக்கும் தங்கள் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மெட்ரோ தண்ணீரை பிடித்து வருகிறார்கள்.

மூன்று முறை குடங்களில் தண்ணீர் கொண்டு சென்று வீட்டில் சேர்க்கிறோம். கடந்த இரண்டு மாதங்களாக எங்கள் பகுதியில் இருக்கும் குழாய்களில் கருப்பு நிறத்தில்தான் தண்ணீர் வருகிறது. குழாயில் அடித்துச் சென்றுதான் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம் என்கிறார் தர்ஷிணி.

வெறும் ஒரு மணி நேரம்தான் தண்ணீர் வருகிறது. ஒரு குடும்பத்துக்கு இரண்டு அல்லது 3 குடம் தண்ணீர்தான் கிடைக்கிறது. இங்கு 500 குடும்பங்கள் இருக்கின்றன என்கிறார் 35 வயது பெண்மணி அமுதா.

இங்கிருக்கும் பெண்கள் எல்லாருமே, தங்களுடன், குழந்தைகளையும் தண்ணீர் பிடிக்க அழைத்து வந்துவிடுகிறார்கள். அப்படி இல்லை என்றாலும், தண்ணீர் இல்லாததால் பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலைதான் நீடிக்கிறது.

சிலர் மூன்று சக்கர சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வந்து தண்ணீர் எடுத்துச் செல்கிறார்கள். எங்களிடம் அவ்வளவு பணம் இல்லாததால் நடந்து வந்துதான் தண்ணீர் எடுத்துச் செல்லும் நிலை நீடிக்கிறது.

தினக் கூலி வேலை செய்யும் பெண்கள் கூட தினமும் பணிக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு ரூ.200 சம்பாதிப்போம். ஆனால் தண்ணீர் இல்லாததால் தினமும் வேலைக்குச் செல்ல முடியவில்லை என்கிறார் ரமணி. அவ்வளவு ஏன் தினமும் காலை உணவு தயாரித்து விற்பனை செய்து வந்தேன். தண்ணீர் இல்லாததால் அந்த கடையையும் மூடிவிட்டேன் என்கிறார் நிலத்தை உற்று நோக்கியவாறு.

இங்கு குழாயில் வரும் மாசடைந்த தண்ணீரைக் குடித்து சிலருக்கு மஞ்சள்காமாலை பாதித்திருப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.