கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள், விவசாயத்தை விட்டுவிட்டு மீன்பிடிக்கச் சென்றுவிட்டார்கள்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:20 am

ENS


சென்னை: தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள், விவசாயத்தை விட்டுவிட்டு மீன்பிடிக்கச் சென்றுவிட்டார்கள்.

விவசாயி முனுசாமி தனது விளை நிலத்தில் விவசாயத்தைத் தொடர முடியாத நிலையில், கட்ரங்கால் ஏரியில் அதிகாலை 6 மணிக்கே சென்று மீன்பிடிக்கிறார். அவர் மட்டுமல்ல, அவருடன் ஏராளமான விவசாயிகளும் மீன்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் பகுதியில் கடுமையான தண்ணீர் பஞ்சம் காரணமாக விவசாயிகள் எல்லாம் தற்காலிகமாக மீனவர்களாக மாறியுள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் முற்றிலும் வறண்டு போகவிருக்கும் ஏரிகளில் இருக்கும் மீன்களை பிடிப்பதுதான் இவர்களது அன்றாடப் பணி.

ஏரி வறண்டு, மீன்கள் இறந்து விடுவதற்குள் எவ்வளவு மீன்களைப் பிடிக்க முடியுமோ அவ்வளவு மீன்களைப் பிடித்து விட வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள்.

இதுதான் முதல் முறை இந்த ஏரி முற்றிலும் வறண்டு போகும் நிலையை அடைந்துள்ளது என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த ஆனந்த். இந்த ஏரியில் இருக்கும் மீன்களைப் பிடிக்க ரூ.20000ம் கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறார் இவர்.

கடைசியாக 30 அடி வரையிலாவது ஏரியில் தண்ணீர் இருக்கும். இந்த ஆண்டு வெறும் 2 அடி தண்ணீர்தான் இருக்கிறது. இதுவரை இந்த ஏரியில் இருக்கும் தண்ணீர் முழுக்க விவசாயத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.

விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு, மீன்பிடி தொழில் மூலமாக ஏதோ ஒரு சிறு வருவாய் கிடைக்கிறது. ஏரியில் மீன்பிடிக்க இவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.700ம் ஒரு கிலோ மீனும் ஊதியமாகக் கிடைக்கும் என்கிறார் ஆனந்த்.

இந்த ஏரியில் இருந்து விரால் மற்றும் குரவை மீன்கள் கிடைக்கின்றன. விரைவில் மழை பெய்யும், நாங்கள் மீண்டும் எங்கள் விவசாயப் பணிக்கே திரும்புவோம் என்று வானத்தைப் பார்த்துக் கொண்டே நெற்றியில் இருந்து வழிந்து நெஞ்சில் வந்து விழும் வியர்வையைத் துடைத்தபடி சொல்கிறார் விவசாயி முனுசாமி.

இங்கு பிடிக்கப்படும் மீன்கள் காசிமேடு, ராயபுரம், எண்ணூர் பகுதிகளில் விற்கப்படுகிறது. ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை லாபம் கிடைக்கிறது. கிடைக்கும் லாபத்தில், விவசாயிகளுக்கு ஊதியம் போக மிச்சமிருக்கும் பணத்தை சமூக பணிக்காகவும் செலவிடுவதாக ஆனந்த் கூறுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.