சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

குனிந்து கும்பிட்டு பதவியைப் பெற்றது யார்? பேரவையில் இன்றைய முக்கிய விவாதம் இதுதான்!

தமிழகத்தில் எத்தனையோ விவாதத்துக்குரிய விஷயங்கள் இருக்கும் நிலையில், குனித்து கும்பிட்டுப் பதவியைப் பெற்றவர்கள் யார் யார்? எத்தனை முறை? என்ற விவாதம் சட்டப்பேரவையில் இன்று காரசாரமாக நடைபெற்றது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:26 am

DIN


சென்னை: தமிழகத்தில் எத்தனையோ விவாதத்துக்குரிய விஷயங்கள் இருக்கும் நிலையில், குனித்து கும்பிட்டுப் பதவியைப் பெற்றவர்கள் யார் யார்? எத்தனை முறை? என்ற விவாதம் சட்டப்பேரவையில் இன்று காரசாரமாக நடைபெற்றது.

சட்டப்பேரவையில் இன்று திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி பேசுகையில், மு.க. ஸ்டாலின் யாரிடமும் குனிந்து, கும்பிட்டு பதவியைப் பெறவில்லை. தமிழகத்தின் எதிர்கால தலைமை மு.க. ஸ்டாலின்தான் எனக் கூறினார்.

இதனால் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. செந்தில் பாலாஜியின் பேச்சுக்கு முதல்வர் பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார். குனிந்து பதவியைப் பெற்றார்கள் என எங்களை தொடர்புபடுத்தி செந்தில் பாலாஜி பேசியது தவறு என்று முதல் எதிர்ப்பைப் பதிவு செய்தார் முதல்வர்.

இதற்கு, அதிமுக பிளவுபட்டபோது ஓ. பன்னீர்செல்வம் பேசியதை நான் இப்போது குறிப்பிட்டால் என்னவாகும்? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, ஜெயலலிதா இருக்கும் போது அவரிடம் எத்தனை முறை குனிந்து கும்பிடு போட்டு செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியை பெற்றார் என்பது எங்களுக்குத் தெரியும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் பேசிய முதல்வர் பழனிசாமி, கடந்த ஆண்டுகளில் செந்தில்பாலாஜி எத்தனை சின்னங்களில் போட்டியிட்டார் என்பதும், ஆரம்பத்தில் மதிமுக, பிறகு அதிமுக, பிறகு அமமமமமமமுக, இன்று திமுக என பல கட்சிகளில் போட்டியிட்டவர்தான் செந்தில்பாலாஜி. ஆனால், ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து பிரிந்த போதும், வேறு கட்சிகளில் செந்தில்பாலாஜியைப் போல சேரவில்லை. தனித்து நின்ற தர்மயுத்தம் நடத்தினார். மீண்டும் அதிமுகவில் இணைந்தார் என்று ஓபிஎஸ்ஸைப் பாராட்டிப் பேசினார்.

இவ்விதமாக, பேரவையில் இன்று மிக முக்கிய விவாதம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.