டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

நாடாளுமன்றத் தேர்தலோடு 21 தொகுதி சட்டப்பேரவைத் தேர்தலையும் சேர்த்து நடத்துங்க: ஆணையத்திற்கு ஸ்டாலின் கடிதம் 

நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாகவுள்ள 21 தொகுதிகளுக்கான  சட்டப்பேரவைத் தேர்தலையும் சேர்த்து நடத்துமாறு, திமுக தலைவர் ஸ்டாலின்  தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

News image
Updated On :8 பிப்ரவரி 2019, 10:27 am

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாகவுள்ள 21 தொகுதிகளுக்கான  சட்டப்பேரவைத் தேர்தலையும் சேர்த்து நடத்துமாறு, திமுக தலைவர் ஸ்டாலின்  தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ஆகிய இருவருக்கும் ஸ்டாலின்  எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தேர்தல் ஆணையமானது நாடாளுமன்றத் தேர்தலை ஏப்ரல் மாதத்தில் ஏழு கட்டங்களாக நடத்தவுள்ளதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே இதனோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.  இதன் மூலம் வாக்காளர்கள், தேர்தல் ஆணையம் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மதிப்புமிக்க நேரம் மிச்சமாவதோடு, அரசு கஜானாவுக்கும் செலவு குறையும்.

குறிப்பிட்ட 21 தொகுதிகளும் தேர்தல் நடைபெறவுள்ள 39 நாடாளுமன்றத்தொகுதிகளுக்குள் வந்துவிடுவதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல் செய்வது எளிதாக இருக்கும். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும்  ஊழியர்களையும் திறம்பட பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.