எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

அதிமுக - திமுக நேருக்கு நேர் மோதும் மயிலாடுதுறை: ஒரு ஃபுல் ரிப்போர்ட்!

ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி. அதிமுக சார்பில் ஒரு முறை எம்எல்ஏவாக இருந்த ஆசைமணியும், திமுக சார்பில் 4 முறை எம்எல்ஏவாக இருந்த ராமலிங்கமும் மோதுகிறார்கள்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:36 am

ENS


ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி. அதிமுக சார்பில் ஒரு முறை எம்எல்ஏவாக இருந்த ஆசைமணியும், திமுக சார்பில் 4 முறை எம்எல்ஏவாக இருந்த ராமலிங்கமும் மோதுகிறார்கள்.

2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பாரதி மோகன் 2,77,050 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொகுதியை கைப்பற்றியிருந்தார்.

இந்த தொகுதிக்கு உட்பட்ட 6 பேரவைத் தொகுதிகளில் பாபநாசம், பூம்புகார், சீர்காழி மற்றும் மயிலாடுதுறை ஆகியவை அதிமுக வசமும், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய தொகுதிகள் திமுக வசமும் உள்ளன.

தஞ்சாவூரின் அய்யம்பேட்டை முதல் மயிலாடுதுறையின் நீடூர் வரை வன்னியர்களும், தலித்துகளும் தவிர ஏராளமான முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகிறார்கள்.

திமுக, அதிமுக மற்றும் அமமுக கட்சியின் வேட்பாளர்கள் அனைவருமே வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ரிபயுதீன். முஸ்லிம் மக்களின் வாக்குகளைத் திரட்டவே கமல் இவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

விவசாயம்தான் இந்த தொகுதியில் முழு பலமும். காவிரி டெல்டா பகுதிகளும்  இதில் அடங்கும். காவிரி நதிநீர் பிரச்னை இப்பகுதியில் பதிவாகும் வாக்குகளில் எதிரொலிக்கும் என்று நம்பப்படுகிறது.

அடுத்து ஹைட்ரோ கார்பன் திட்டம். இது மக்களை அதிகம் பாதித்திருக்கும் திட்டம். இந்த திட்டத்தை எதிர்த்து 500 நாட்களுக்கும் மேல் இப்பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டது.

மூன்றாவது பிரச்னை இந்த தொகுதியில் உள்ள 2 தனியார் சர்க்கரை ஆலைகளும், ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலையும் சரிவர இயங்காததும், கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலையை உடனடியாகக் கொடுக்காததும் முக்கியப் பிரச்னையாக உள்ளது.

இங்கு குத்துவிளக்கு செய்யும் தொழிலை ஏராளமானோர் கையாண்டு வந்த நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பினால் அந்த தொழிலும் நலிவடைந்துள்ளது. நலிவடைந்திருக்கும் விளக்கு செய்யும் தொழிலை ஊக்கப்படுத்தவும், வெகு காலமாக பாதியில் நிறுத்தப்பட்டிருக்கும் மயிலாடுதுறை - தரங்கம்பாடி- காரைக்கால் ரயில் பாதையை உடனடியாக அமைத்து, கோயில் ஸ்தலமான மயிலாடுதுறையை, மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து எளிதாக வந்து செல்ல வழி வகை செய்ய வேண்டும் என்பதும் அந்த தொகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இருவருமே எளிதில் அணுகக் கூடியவர்களாகவும், இந்த தொகுதியைப் பற்றி நன்கு தெரிந்தவர்களாகவும் இருப்பதாக திருவிடைமருதூரில் டீக்கடை நடத்தி வரும் துரை கூறுகிறார்.

எனவே, மயிலாதுறையில் மீண்டும் அதிமுகவின் கை ஓங்குமா? அல்லது திமுகவின் கொடி பறக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.