தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

கஜா புயல் சேதங்களை மதிப்பிட மத்திய அரசு குழு அனுப்பவேண்டும்: சிதம்பரம் வலியுறுத்தல்

தமிழக அரசு அறிக்கை சமர்பிக்கும் வரை காத்திருக்காமல் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட மத்திய உள்துறை அமைச்சகம் மத்திய குழுவை அனுப்பவேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தினார்.

News image
Updated On :17 நவம்பர் 2018, 1:20 pm

தமிழக அரசு அறிக்கை சமர்பிக்கும் வரை காத்திருக்காமல் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட மத்திய உள்துறை அமைச்சகம் மத்திய குழுவை அனுப்பவேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தினார். 

காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே ஆர் ராமசாமியுடன் கஜா புயலால் காரைக்குடியில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மீட்புப் பணிகளை பார்வையிட்டார். 

அதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில், புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்தார். புயல் நேரத்தில் தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டினார்.     

மேலும், தமிழக அரசு அறிக்கை சமர்பிக்கும் வரை காத்திருக்காமல், புயலால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழுவை அனுப்பி மதிப்பிட்டு, மீட்புப் பணிக்கான உரிய தொகையை மத்திய அரசு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் சிதம்பரம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.